அவளின்
கைக்குள் இருந்தவரை
நினைத்ததில்லை!
என் கைகளுக்கு
சிறகு முளைத்தபிறகு
மறந்ததில்லை!!
கட்டிய கூட்டின்
வெறுமைகண்டு
வாழ பிடிக்கவில்லை
என்னோவோ!!!
தாய்க்குருவி
இரவெல்லாம்
கறைகிறது.
பறக்கும் தூரம்தான்
என்றிருந்தேன்
கறைச்சல்
குறைவதாயில்லை
இப்போது
பறப்பது மட்டுமே
பாக்கி ...
No comments:
Post a Comment
thanks