Tuesday, December 21, 2021

அம்மா

 

அவளின்

கைக்குள் இருந்தவரை

நினைத்ததில்லை!

 

என் கைகளுக்கு

சிறகு முளைத்தபிறகு

மறந்ததில்லை!! 

 

கட்டிய கூட்டின்

வெறுமைகண்டு

வாழ பிடிக்கவில்லை

என்னோவோ!!!

 

தாய்க்குருவி

இரவெல்லாம்

கறைகிறது. 

 

பறக்கும் தூரம்தான்

என்றிருந்தேன் 

கறைச்சல்

குறைவதாயில்லை

 

இப்போது

பறப்பது மட்டுமே

பாக்கி ...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!