Wednesday, February 29, 2012

அவள்...





















அவள்
அன்பாய் போசியபோது
யோசித்திருக்கவேண்டும்

அவள்
மௌனமாய் சிரித்தபோது
யோசித்திருக்கவேண்டும்

அவள்
தேவைக்கு மட்டுமே
பயன்படுத்தியபோது
யோசித்திருக்கவண்டும்


அவள்
காதலனோடு இருந்தபோதவது
யோசித்திருக்கவேண்டும்


அவள்
எனக்கானவள்
இல்லையென்பதை...

Monday, February 27, 2012

மரியாதைக்குரிய நண்பர்களுக்கு...


         

                            கடந்த சில நாட்களாகவே  என்மீது உங்களுக்கு சிறியதாய் ஒரு கோபம் இருப்பதை என்னால் முழுமையாய் உணரமுடிகிறது அதற்க்கான காரணமும் நானகவே இருப்பதால், உங்கள் முன்னால் அமைதியாய் நிற்பதை தவிர என்னால் வேறென்ன செய்யமுடியும், நேற்றிரவு உங்களோடு அப்படி நடந்து கொண்டதற்கு என்னை மன்னிக்கவும், என்னால் முன்புபோல இயல்பாய் இருக்கவும் முடியவில்லை உங்கள் நட்புக்கு முன்னால் என்னால் நடிக்கவும் முடியவில்லை, என்னை பற்றி அதிகமாக கவலைப்படும் இரண்டு ஜீவன்கள் நீங்கள்தான் என்பது நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொள்ள தேவையில்லை, இப்போது நான் உங்களோடு சரியாக பேசாதர்க்கு எனக்குள் இருக்கும் சின்ன கவலைதானே ஒழிய நீங்கள் அல்ல, எல்லாம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், இபோதைக்கு மிக பெரிய அமைதியை மட்டுமே நான் விரும்புகிறேன் அதற்காக தனிமையை துணைக்கு வைத்திருக்கிறேன் அவ்வளுவுதான், கொஞ்ச கால அவகசகொடுங்கள் நான் மிண்டும் உங்கள் ஆமையடி மகேசாக மாற, நீங்கள் எனக்கு செய்த உதவிகளுக்கு என்னால் எதுவும் திருப்பி தரமுடியாது என்பது எனக்கு தெரியும், நீங்களும் என்னிடம் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை என்பதும் எனக்கு தெரியும், உங்களின் நட்புக்கு நான் தகுதியானவன என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் உங்களின் அன்பு எனக்கு பொக்கிஷம், அதை பாதுகாக்க முடியாததை நினைத்து நான் வெட்க்கபடுகிறேன்... இப்போது இருக்கிற இந்த நிலைமை மாறும்வரை என்னை கொஞ்சம் தனியாகவிடுங்கள், சிக்கிரமாய் திரும்பிவருகிறேன் உங்கள் பழைய நண்பனாக, இடைப்பட்ட காலத்தில் நடந்த, நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் மன்னிக்கவும்,,,
புரிந்து கொள்ளாத அன்பு (கொலைக்கு) செத்ததற்கு சமம்,  நான் நடைபினமாகவே வாழ்வதால், உங்கள் அன்பை பிரதிபலிக்க முடியாமல் இருக்கிறேன்...  நண்பன் விக்டரும், கனகும் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன், உங்களிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நீங்கள் என்னை ஏற்கனவே மன்னித்துவிட்டதால் இப்போது மனிப்பு கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது, உங்களுக்கு எழுத வேண்டும் என தோன்றியது எழுதிவிட்டேன், உங்களுக்கு என்னை அடிக்க, திட்ட வேண்டுமென்று தோன்றினால் அதை செய்யுங்கள்...
                                                                                     

                                                                                                    நட்புடன்
                                                                                         ஆமையடி மகேஷ் 

மனதில் நின்றது ...

Friday, February 24, 2012

அரசபயங்கரவாதம்...

சென்னையில் வங்கி கொள்ளையர்களை! சுட்டு கொன்றது சரியா தவறா?

நண்பர் ஒருவர் எழுதியது உங்களுக்காக (பண்புடன் குழுமத்தில் நண்பர்  உதயன்.மு எழுதியது)

கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே எப்போதும் இல்லாமல் அந்த பகுதியில் போலீஸ் நடமாட்டம் அதிகம் இருந்தது,

ஜனநெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில் வீட்டு வாசலில் வெளியே கார், ஸ்கூட்டர் சத்தம் கூட தெளிவாக கேட்கும் அப்படி இருக்கையில் துப்பாக்கி சத்தம் ஊரையே எழுப்பி இருக்கும்.

தீப்பெட்டி சைஸ் வீட்டில் வெளிச்சம், காற்று இல்லாமல் இருக்கவே முடியாது, நாங்கள் மிகவும் அவதிபட்டுள்ளோம் மின்சாரம் இல்லாத சமயங்களில் தெருவில், மாடியில் படுத்து உறங்கி இருக்கோம், ஆகையால் மின்சாரத்தை தூண்டித்திருக்கலாம்,

மேலும் ஒரே வாசல் தான் உள்ளது, வெளியெ தப்பி செல்ல வாய்ப்பே இல்லை.

குடிநீர் மற்றும் அத்தியவாசியத்திற்க்கான் தண்ணீர் தேவையை தூண்டித்திருக்கலாம்.

கண்ணீர் புகை, மயக்க வாயு உபயோகித்திருக்கலாம்.

ஜன்னல் வழியாக சுட்டர்கள் என சொல்லி உள்ளார்கள், ஒரு அடைப்பை வைத்து ஜன்னலை மூடி இருக்கலாம்.

அத்தியவாசியத்திற்க்கு தேவையானவை எல்லாவற்றையும் தூண்டித்தால் எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும்.

அப்படியே 5 வரும் குற்றவாளிகளாக இருக்க சாத்தியமா, ஒருவர் குற்றவாளியாக இருந்து பிணை கதையாக சிலரை பிடித்து வைத்திருக்கலாம்.

சுட்டதை விடியோ எடுத்துவைத்துள்ளனரா, (எல்லா காவல் நிலையங்களிலும் கேம் கார்ட் தந்துள்ளதாக கேள்விபட்டேன்), அட்லிஸ்ட் பொபைல் காமிராவிலாவது எடுத்துருந்திருக்கலாம்.

எல்லாவற்றையும் விட பெஸ்ட் ஐடியா ஒன்று காவல் துறைக்கு ரூமிற்க்குள் தண்ணியை உற்றி விட்டு கரண்ட் தந்திருக்கலாம் ஷாக் மட்டும் அடிக்கும் அளவில் விட்டுவிட்டு, (சிலர் கேட்கலாம் ஷீ போட்டிருந்தனரே என்று, ஜன்னல் வழியாக பயர் இஞ்ஜீன் உதவி கொண்டு தண்ணீர் பிய்த்து அடித்திருந்திக்கலாம் அல்லவா)

காவல் துறை ஆயிரம் காரணம் சொல்லலாம் எத்தனையோ கருவிகள் உண்டு, உதாரணம் விலங்குகளை பிடிக்க மயக்க மருந்து ஊசிகளை துப்பாக்கி உபயோகிப்பதை ஏன் குற்றவாளிகளுக்கும் இது போல் உபயோகிக்க கூடாது??????????????


"நேற்று அதிகாலை நடந்த சம்பவத்தை தமிழகத்தின் ஒட்டுமொத்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு காக்கிகளால் விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறேன்....
ஒரு நபரை கூட உயிரோடு பிடிக்கும் எண்ணமே இன்றி பிணத்தை மட்டும் வெளிஉலகுக்கு காட்டி இருப்பதை 'அரசபயங்கரவாதம்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?? -   (நண்பர் ஸ் பெ)

வாருங்கள் ஜனநாயகம் காக்க விவாதிப்போம்..

என்னுள் தேடுகிறேன் ...


உலகம்
ஒருநாள் என்னை
அடையாளம் கண்டுகொள்ளும்
நான் இயக்குனாயிருப்பேன்

உலகம்
ஒருநாள் என்னை
கொலைவெறியுடன் தேடித்திரியும்
நான் புரட்ச்சியாளனாயிருப்பேன்

உலகம்
ஒருநாள் என்னை
கொண்டாடும்
நான் முதல்வனாயிருப்பேன்

உலகம்
ஒருநாள் தூங்காமலிருக்கும்
நான் செத்துபோயிருப்பேன்.

ஆறேழுவருடங்களுக்கு முன்னால்  (20/03/2005)  நான் எனக்காக எழுதிய நம்பிக்கை வார்த்தைகளை மீண்டும் நேற்றிரவு(23/02/12) படித்துப்பார்த்தேன். இன்று இதில் எதற்கும் தகுதியில்லாத நிலையை நானே ஏற்படுத்தி கொண்டதற்காக வெட்க்கவடுவதைதவிர வேறென்ன செய்யமுடியும்

எப்போதே படித்த  அய்யா மூ. மேத்தாவின்  கவிதையொன்று இப்போது நினைவாக்கு வருகிறது...

"நம்பிக்கை நார்
மட்டும் நம் கையில்
இருந்தால் போதும்
உதிர்ந்த பூக்கள்
ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்
கழுத்து தன்னைதானே
மாலையாய் சூட்டிகொள்ளும்" 

மீண்டும் என்னுள் தொலைந்து போன நம்பிக்கையை தேடுகிறேன் நம்பிக்கையியோடு...


Thursday, February 16, 2012

ஏக்கம்...




பசிக்கு ஏங்கும்
குழந்தைபோல

வார்த்தைகளுக்கு ஏங்கும்
கவிஞ்ஞன் போல

பூஜைக்கு ஏங்கும்
கடவுள் போல

நானும் உன்
காதலுக்கு.... 

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!