Monday, February 27, 2012

மரியாதைக்குரிய நண்பர்களுக்கு...


         

                            கடந்த சில நாட்களாகவே  என்மீது உங்களுக்கு சிறியதாய் ஒரு கோபம் இருப்பதை என்னால் முழுமையாய் உணரமுடிகிறது அதற்க்கான காரணமும் நானகவே இருப்பதால், உங்கள் முன்னால் அமைதியாய் நிற்பதை தவிர என்னால் வேறென்ன செய்யமுடியும், நேற்றிரவு உங்களோடு அப்படி நடந்து கொண்டதற்கு என்னை மன்னிக்கவும், என்னால் முன்புபோல இயல்பாய் இருக்கவும் முடியவில்லை உங்கள் நட்புக்கு முன்னால் என்னால் நடிக்கவும் முடியவில்லை, என்னை பற்றி அதிகமாக கவலைப்படும் இரண்டு ஜீவன்கள் நீங்கள்தான் என்பது நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொள்ள தேவையில்லை, இப்போது நான் உங்களோடு சரியாக பேசாதர்க்கு எனக்குள் இருக்கும் சின்ன கவலைதானே ஒழிய நீங்கள் அல்ல, எல்லாம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், இபோதைக்கு மிக பெரிய அமைதியை மட்டுமே நான் விரும்புகிறேன் அதற்காக தனிமையை துணைக்கு வைத்திருக்கிறேன் அவ்வளுவுதான், கொஞ்ச கால அவகசகொடுங்கள் நான் மிண்டும் உங்கள் ஆமையடி மகேசாக மாற, நீங்கள் எனக்கு செய்த உதவிகளுக்கு என்னால் எதுவும் திருப்பி தரமுடியாது என்பது எனக்கு தெரியும், நீங்களும் என்னிடம் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை என்பதும் எனக்கு தெரியும், உங்களின் நட்புக்கு நான் தகுதியானவன என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் உங்களின் அன்பு எனக்கு பொக்கிஷம், அதை பாதுகாக்க முடியாததை நினைத்து நான் வெட்க்கபடுகிறேன்... இப்போது இருக்கிற இந்த நிலைமை மாறும்வரை என்னை கொஞ்சம் தனியாகவிடுங்கள், சிக்கிரமாய் திரும்பிவருகிறேன் உங்கள் பழைய நண்பனாக, இடைப்பட்ட காலத்தில் நடந்த, நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் மன்னிக்கவும்,,,
புரிந்து கொள்ளாத அன்பு (கொலைக்கு) செத்ததற்கு சமம்,  நான் நடைபினமாகவே வாழ்வதால், உங்கள் அன்பை பிரதிபலிக்க முடியாமல் இருக்கிறேன்...  நண்பன் விக்டரும், கனகும் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன், உங்களிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நீங்கள் என்னை ஏற்கனவே மன்னித்துவிட்டதால் இப்போது மனிப்பு கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது, உங்களுக்கு எழுத வேண்டும் என தோன்றியது எழுதிவிட்டேன், உங்களுக்கு என்னை அடிக்க, திட்ட வேண்டுமென்று தோன்றினால் அதை செய்யுங்கள்...
                                                                                     

                                                                                                    நட்புடன்
                                                                                         ஆமையடி மகேஷ் 

2 comments:

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!