Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் கொலைகார இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன,

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:

01.இந்தியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கேமரூன்
05.சிலி
06.கோஸ்டாரிக்கா
07.செக் குடியரசு
08.கௌதமாலா
09.ஹங்கேரி
10.ஆஸ்திரேலியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிசியஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நார்வே
17.பெரு
18.போலந்து
19.மால்டோவா குடியரசு
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.உருகுவே

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:

01.வங்கதேசம்
02.சீனா
03.காங்கோ
04.கியூபா
05.ஈக்வேடர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலத்தீவு
09.மௌரிடானியா
10.பிலிப்பைன்ஸ்
11.கத்தார்
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா

வாக்களிக்காத நாடுகள்:

01.அங்கோலா
02.போஸ்ட்வானா
03.பர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்டான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்

Friday, March 16, 2012

வலி..


















முதன்முதலாய்
முகம்புதைத்து அவள் தந்த
முத்தத்தை
முழுமையாய் பருகுவதர்க்குள்
கலைந்துபோன கனவை
சபிக்கிறேன்..
(14.03.12)

Thursday, March 15, 2012

இவள்தான்..





















ஒருநாள்...

நண்பனுக்கு அறிமுகபடுத்துவேன்
நீ என் தோழியென்று

தோழிக்கு அறிமுகபடுத்துவேன்
நீ என் காதலியென்று

அம்மாவுக்கு அறிமுகபடுத்துவேன்
நீ என் மனைவியென்று

மரணத்திற்கு அறிமுகபடுத்துவேன்
இவள்தான் உன்னை எனக்கு
அறிமுகபடுத்தியவளென்று...

Tuesday, March 13, 2012

இனியும் தொடரவேண்டுமா இலவசங்கள்?

              

                      வாங்கும் சக்தியை விட இலவசத்திர்க்காக ஏங்கும் சக்தியே இப்போது தமிழக மக்களிடம் மேலோன்கிநிர்க்கிறதுமுன்பெல்லாம் என் கிராமத்துக்கு போகும்போது தங்கள் வருமானத்தில் அவர்கள் மொத்தமாய் வாங்கமுடியாத பொருட்களை installmentல்    மிக்சி, டிவி, கிரைண்டர், கட்டில் போன்ற தேவைகளுக்கு தன்னுடைய உழைப்பின் சேமிப்பில் இருந்து வாங்குவதை பார்க்கும் பொது மிகுந்த மகிழ்ச்சிஆனால் இப்போதெல்லாம் அதை பற்றியே பேச்சுகளே இல்லை எல்லாமே இலவசமாக தமிழக அரசுகளே கொடுத்துவிட்டது. விளைவு சோம்பேறித்தனமும் சேமிப்மின்மையும்  கூடவே வளர்ந்துவிட்டது எல்லாம் தமிழக அரசுகளே கொடுத்திவிட்டதால் அவர்களின் சேமிப்பு உயர்ந்திருக்கிறதா? வாழ்கை தரம்தான் மாறியிருக்கிறதா? அப்படி ஒரு அதிசயமும் நிகழவில்லை அப்படிஎன்றல் அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் வருமானம் எங்கே போகிறது
        
                    இன்றைக்கு ஒரு இந்தியனின் சராசரி நாள் வருமானம் 111 ரூபாய் என்கிறது அரசு புள்ளிவிபரங்கள் ஆனால் ஒரு குவாட்டர் விலை 80 ரூபாய் கிராமத்துகாரர்கள் அதை வாங்குவதற்கு பேருந்து செலவு குறைந்தபட்டசம் 10 ரூபாய். ஊறுகாய், மிச்சர் செலவு 15 ரூபாய், பீடி சிகரட் செலவு 20 ரூபாய் இப்போது அவரின் கையிருப்பு -14 ரூபாய் இதே நிலையில் தொடரும் ஒரு தின குடிகாரனின் ஓராண்டு கடன் 5110ரூபாய்  இது ஒரு கிராமத்து குடிகாரனின் ஆண்டு வருமான இழப்பு, இதே கணக்கை ஒரு நகரத்துவாசியோடு ஒப்பிட்டால் போதையடிக்காமலே  நமக்கு தலைசுத்துது. அதாவது ஒரு சாதாரண பாரில் குவாட்டர் விலை 150 ரூபாய் பறப்பது நடப்பது ஊர்வது இதன்விலை குரந்தபட்ச்சம் 50 ரூபாய் சிகரட் 30 ரூபாய் இப்போது அவரின் கையிருப்பு -119ரூபாய். இதே நிலையில் தொடரும் ஒரு தின குடிகாரனின் ஓராண்டு கடன் 43435ரூபாய் இது ஒரு நகரத்து குடிகாரனின் ஆண்டு வருமான இழப்பு. தமிழக மக்கள்தொகை இப்போது கிட்டத்தட்ட ஆறரைகோடி, டாஸ்மார்க் ஆண்டு வருமானம் கிடடத்தட்ட முப்பதாயிரம் கோடியைதாண்டி ஓடிகொண்டிருக்கிறது!!! (கண்ணகட்டுது சாமி) தற்போது தமிழக அரசின் கடன் ஒருலட்சம் கோடி... டாஸ்மார்க்கின் வருமானத்தில்தான் தமிழக அரசுகள் இலவசங்களை அள்ளி எரிந்துகொண்டிருக்கிறது. நம் பணத்தையே நமக்கு தருவதற்கு பெயர் இலவசமா?    தமிழக அரசு இதுபோன்ற இலவசங்களை கொடுக்காவிட்டால் இன்னும் எத்தனயோ வீடுகளில் டிவி பேன் போன்ற பொருட்டகளை அவர்களால் (ஏழைகளால்)   வாங்கமுடியாமலேயே போயிருக்ககூடும் என்பதை ஒரு வாதத்திற்காக எற்றுகொண்டால்கூட அதனால் நாம்பெறும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம்...

             ஒரு சின்ன ஒப்பிடு பார்ப்போம்.  எனக்கு தெரிந்து பதினைந்து வருடத்திற்கு முன்னால் ஒரு கிளாஸ் சாராயத்தின் விலை இரண்டு ரூபாய் ஊருகாய் இலவசம், அதிகபட்ச்சமாக ஒரு நபர் மூணு கிளாஸ் குடிக்கமுடியும் பீடி தீப்பட்டி என எல்லாம் சேர்த்தால் சராசரி ஒரு குடி மகனுக்கான செலவு 10ரூபாய் அப்போது  சராசரி வருமானம் நாள் ஒன்றுக்கு முப்பது என்று வைத்துகொண்டால் கூட அவரின் சேமிப்பு தினமும் 20ரூபாய் ஆனால் இப்போது நிலைமை தலைகிழ் நகரமயமாக்கல், உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், ஐந்தாண்டு, பத்தாண்டு வளர்ச்சித்திட்டங்கள் என ஏதேதோ அரசு கண்கட்டி வித்தை காட்டுகிறது ஆனால் இன்னும் இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வறுமையை ஒழிக்க இந்திய அரசு வருடத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது (டாஸ்மார்க் வருமானத்தைவிட குறைவுதான்) ஆனால் இன்னும் வறுமை ஒழிந்தபாடில்லை!
          தமிழகத்தை பொறுத்தவரை நம்முடைய வளர்ச்சிக்கு மிகபெரிய சாபகேடு அரசு தரும் இலவசங்கள்தான் இந்த இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கிராமப்புறங்களில் புதிய தொழில் தொடங்குவதற்கு, இலவச கல்வி கொடுப்பதற்கு பயன்படுத்தினாலே நாம் விரைவிலேயே அடுத்தகட்டத்தை எட்டமுடியும், இதை சரியாக செய்துகொண்டிருக்கும் சீனா கடந்த முப்பதாண்டில் தன் நாட்டில் அறுபது சதவிதம் வறுமை கோட்டின் கீழ் இருந்த மக்களை பத்து சதவிதம்மாக மாற்றீருக்கிறது இதே நிலைமையில் சீனா போனால் இன்னும் ஐந்தாண்டில் சீனாவில் மக்கள் வறுமையில் இருக்கமாட்டர்கள் ஆனால் இந்தியாவின் நிலைமை!!!!

இன்னும் இலவசங்களை மக்களுக்கு அள்ளி இறைப்பதைவிட மக்கள் நலனுக்கான புதிய தொழில் மற்றும் புதிய திட்டங்களை வகுப்பதுதான் மூலம் அடுத்த தலைமுறையாவது இலவசங்களுக்கு கையேந்தாமல் நிற்கவும் சுயமரியாதையோடு வாழவும் அது வழிவகுக்கும்...நாம் அரசிடம் இருந்து இலவசமாய் எதிர்பார்ப்பது கல்வியையும், மருத்துவத்தையும்தானே தவிர ஆடுமடுகளையல்ல.

“டாஸ்மார்க் பக்கத்தில் இலவசமாய் சுடுகாடு கட்டுங்கப்பா குடித்துவிட்டு குடிமகன் அம்மனமாய்  அங்கேயே படுத்துகொள்ளட்டும்”

Sunday, March 11, 2012

காகம்...





















நீ என் வீதிவரும்போதெல்லாம்
தந்தி கம்பத்தில் உட்கார்ந்து
கரைந்து கொண்டிருக்கும் காகத்திற்கு
எப்படி புரியவைப்பேன்
நான் உன் காதலன்
இல்லையென்று...

Sunday, March 4, 2012

புகைப்படம்

                       

                           பொழுது இவ்வளவு கொடூரமாக விடியுமென்று கனவில்கூட நினைத்தது இல்லை. ஜீவா விபத்துல இறந்துட்டான் என்ற செய்தியை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை  இல்லாத தெய்வங்களெல்லாம் வேண்டுகிறேன் இது கனவாக இருக்கவேண்டுமென்று. நண்பர்களுக்கு போன் செய்து உருதிபடுத்திகொண்டேன் இறந்தது அவனேதான். ஜீவா என் பத்துவருட நண்பன் முதன்முதலாய் ஒரு சினிமா ஆடியோ ரிலிஸ் விழாவில்தான் அவனை  பார்த்தேன் துரு துரு என்று அங்கு இங்குமாய் ஓடி  புகைப்படம் எடுத்துகொண்டிருந்தான் பி ஆர் பக்கத்தில் நின்றுகொண்டு வருகிற அத்தனை வீ  பி களையும் தன்  காமரக்குள் நிரப்பிகொண்டிருந்தான்.   மாப்ள குட்டி என்னை அவனுக்கு அறிமுகபடுத்தி வைத்தான் வழக்கம்போல வெள்ளக்கருனுக்கு பிறந்தவன்போல ஹாய் சொல்லியே எங்கள்  நட்ப்பு ஆரம்பித்தது அன்று முதல் இன்றுவரை எங்கள் நடப்பு தொடர்கிறது. அவனுக்கும் திருநெவேலி என்பதால் எங்கள் நடப்பு இன்னும் வேகமாய் இருக்கமாய் வளர்ந்ததுஅவனின் புகைப்படம் போலவே அவனும் அழகு, தண்ணி, தம்மு, பொண்ணு எந்த பழக்கமும் இல்லாதவன். சீராய் வெட்டியமுடி, கட்டுமஸ்தான உடம்பு, சிரித்தமுகம், வெள்ளை சட்டை, டைட் புளு  ஜீன்ஸ் அவனின் தனியடையாளம்.

ஆம்புலன்ஸ்ல இப்பதான் பாடியை எத்திகிட்ட்றிருக்க்கங்க நா அவங்கள அனுப்பிவிட்டுட்டு ரூமுக்கு வந்துடுறேன் நீபோறப்புட்டு  ரெடியா இரு நா வந்துடனேயே கிளம்பிறலாம் எப்படியும்  ஆம்புலன்ஸ் மெதுவாதான் போகும் . நம்ம பசங்களும் வராங்க நாம கார்ல போயிறலாம், குட்டி சொல்லிகொண்டிருக்கும்போதே எனக்கு தலைசுற்றியது நேத்து ராத்திரிகூட இரண்டுபேரும் ஒன்னாதான் சாப்பிட்டோம். அதுதான் ஜீவா சாப்ட்ட கடைசிசாப்படா... வேகமாய் கிளம்மி குட்டிக்ககா காத்திருந்தேன்

மாப்ள கிளம்பு பசங்க வந்திட்டாங்க, டிரைவரன்னே எவ்வளவு நேரத்தில திருநெல்வேலி போகமுடியும் அவர் எட்டு மணிநேரத்துல போகமுடயும்ன்னு சொல்லிமுடிப்பதற்குள் இன்னும் சிக்கிரமா போங்க நா ஜீவாபக்கணும். மாப்ள பதட்டபடாத நாம அவங்களுக்கு முன்னால போயிடரலாம். அண்ணே டிசல் எதாவது போட்னும்முன்ன போட்டுகாங்க குட்டி பேசிகொண்டிருக்கும்போதே மாப்பள எப்படி மாப்ள நடந்தது எங்கவச்சிமாப்ப்ள. போருர்ல வச்சி எந்தவண்டி தட்டிச்சின்னே தெரியல ஸ்பாட்லே இறந்துட்டான் முகம் சுத்தமா சதஞ்சிபோச்சி  பைக் நோருங்கிருச்சி அவன் காமராபேக் மட்டுதான் போளச்சிருக்குகெமர எங்கமாப்ள . காமரா எங்கிட்டதான் இருக்கு குட்டி பேக் தொரக்கிரதுக்குள்ள கையைவிட்டு காமராவை வெளியே எடுத்தேன்

நேத்து நானும் அவனும் கடைசியா போன பேசன்ஷோவோட போட்ட அத்தனையும் அதில் சிரித்து கொண்டிருந்தது ஒவ்வொரு போட்டவும் வோவொரு அழகு. வைடு, வித்பிளாஷ், வித்தௌட், ஜூம் லோ மிடில் எல்ல அங்கிளிலும் அவன் எடுத்தபுகைபடம் சிரித்து கொண்டிருந்தது இன்று காலையில் அத்தனை பத்திரிக்கையிலும் அவன் எடுத்தபோட்டதான் வந்திருக்கு கடைசியாய் பெசன்ஷோ மேடையில் நான் நின்று அவன்  எடுத்தபோட்டாதன் அவனின் கடைசிபோட்ட காரில் முட்டி வென்று ஆழவேண்டும்போலிருன்தது 

மாப்ள எந்திரி ஊருவந்திருச்சி  அழுது அழுது தூங்கிப்போன என்னை குட்டி எழுப்பியபோது வண்டி ஜீவா வீட்டுமுன்னால் நின்றுகொண்டிருந்தது ஊரே இழவு வீடு போல இடிந்து கிடந்தது ஜீவாவின் அம்மா அழுவதற்கு திராணியில்லாமல் திண்ணையில் சாய்ந்திருந்தார்   என்னை பார்த்ததும் தங்கச்சி அழதொடங்கிவிட்டாள் அவளுக்கு ஆறுதல் சொல்ல எனக்கெது வார்த்தைகள், மாப்ள வண்டி இன்னும் அரமணி நேரத்தில  வந்திருமாம் இங்க பத்து நிமிசத்துக்கு மேல பாடிய வைக்கூடாது உடனே தூக்கிரனும் மணி இப்பவே பதினொன்னு அச்சி ராத்திரி புறாவும் இங்க வச்சா பாடி  தாங்காது,  நீ சும்மா சும்மா அழாத நாமதான் ஆகிற வேலயபாக்கணும் ஊர் பெரியவன்கிட்ட பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தாகிவிட்டது குட்டி சொல்லிகொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஷும் வந்துவிட்டது.

 ஜீவா பாடி ஊருக்குள் வந்ததுதான் தாமதம் ஊரே கதரதொடங்கி விட்டது,  கடைசியா எம் புள்ளையோட மொகத்த காட்டுங்க மொகத்த காட்டுங்க அம்மா கதரதொடங்கினாள் ஜீவாவின் முகம் மொத்தமா சிதஞ்சி போயிருச்சி இதபாத்த அம்மா இன்னும் சங்கடப்படுன்னு அம்மவகிட்டவே நெருங்க விடாம புடிச்சிகிட்டச்சி அதே ஆம்புலன்ஸ்ல ஏத்தி கல்லர தோட்டத்துக்கு கொண்டுபோதச்சி இன்னையோட மூணுநாளு ஆச்சி  நானும் குட்டியும் ஊருக்கு கிளம்ம தயாரானோம். அம்மா நீங்க கவலப்படதிங்க நாங்க இருக்கோம் நாங்களும் உங்களுக்கு ஒரு ஜீவாதான்  உங்களுக்கு என்ன வேணும்னாலும் எங்களுக்கு கூப்பிடனும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் ஆறுதல் சொல்லிவிட்டுகிளம்போது,  யயையா ஜீவாவோட போட்டயேதவது இருந்த ஒன்னு கொடுத்திட்டு போங்க நா என்கமரவை பாக்கிறேன் குட்டி அவன் கேமராவை பாக்கறான் ஜீவாவோட கேமராவையும் பாத்தாச்சி ஒரு போட்டோகுட இல்லை ஊரையெல்லாம் போட்ட எடுத்த  ஜீவா கடைசிவரை அவனையொரு போட்டோஎடுக்கமலே செத்துபோயிருந்தான்
     





தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!