அவளின்
கடிதத்திற்காய் திறந்தேயிருக்கும்
என் தபால் பெட்டியில்
ஒரு பறவையின் இறக்கை
எந்த பறவை யாருக்குயெழுதியதோ ...
கூட்டுக்கு சுள்ளியேடுக்கபோன
கணவனுக்கு மனைவியெழுதியதோ!
இரைதேடிபோன அம்மாவுக்கு
குழந்தையெழுதியதோ!!
விட்டுப்போன காதலிக்கு
காதலன்யெழுதியதோ!!!
நுனி இறகின் உலறா
குருதிபோல்...
நானும் காத்திருக்கிறேன் - அந்த
பறவைக்காய்
ஒரு தபால்காரனை போல...