Saturday, May 4, 2013

ஒரு தபால்காரனை போல...


அவளின் 

கடிதத்திற்காய் திறந்தேயிருக்கும் 
என் தபால் பெட்டியில் 
ஒரு பறவையின் இறக்கை 

எந்த பறவை யாருக்குயெழுதியதோ ...

கூட்டுக்கு சுள்ளியேடுக்கபோன
கணவனுக்கு மனைவியெழுதியதோ!

இரைதேடிபோன அம்மாவுக்கு 
குழந்தையெழுதியதோ!!

விட்டுப்போன காதலிக்கு 
காதலன்யெழுதியதோ!!!

நுனி இறகின் உலறா 
குருதிபோல்...
நானும் காத்திருக்கிறேன் - அந்த
பறவைக்காய்

ஒரு தபால்காரனை  போல...   





No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!