Saturday, December 17, 2011

அய்யோ..’ அப்பா...


          இன்னா நைனா உன்னால ஒரே பேஜர பூஜ்ஜி. காத்தல சொன்ன அந்த போட்டவுல புலி மேல குந்திக்கினவரு பேரு மணிகண்டன்னு... ஆயா சொல்லுது அந்த மொள்ளமாரி பேரு ஐய்யப்பன்னு...  மணிகண்டன் எப்புடி நைனா அயப்பனா மாறினாரு சொல்லு நைனா...

அட கஸ்மாலம்...அந்த பெமானியோட உண்மையான பேரு மணிகண்டன்தான் அவங்க அம்மா வச்சது (யாருகண்ட) ... அப்பால அவரு பெரிய ரவுடியா நாம்ப டவுசர் பாண்டி நைனா மாதிரி, அவுங்க  பேட்டையில இருக்கிற புள்ளபுச்சிகள அந்த பேமானியும் அவன் செக்களிகளும் சேந்து அடிச்சி திருடி வயிறு வளத்திருக்கன் இந்த முடிச்சவிக்கி. இவன பாத்ததும் அந்த அப்பாவி சனங்க அயோ அப்பான்னு ஓடி ஒளிஞ்சிருக்காங்க... இந்த அயோ அப்பாதான் அவன் கடவுளான பின்னால   ஐய்யப்பன மாறிடுச்சி...




அண்ணன் பாலாவின் கார்ட்டூன் அதை நிருப்ப்பதை நீங்கள் மேலே பார்த்து உருதி படுத்திகொள்ளுங்கள்

Tuesday, December 6, 2011

இந்திய ஒருமைபாட்டிற்கு வைக்கப்பட்ட உலை...

                    இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 19ஆண்டுகள் முடிந்து விட்டன. பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்திய ஒற்றுமைக்கும்,இறையாண்மைக்கும்,   விடப்பட்ட மிகபெரிய சவால்... இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டவும், பாபர் மசூதியை மீண்டும் கட்டவும் அதன் முழு உரிமைகளையும் இசுலாமியர்களுக்கு வழங்கவும்... பாபர் மசுதியையை இடித்த கயவர்களை தண்டிக்கவும் குரல் கொடுப்போம்... போராடுவோம்...

இந்தியாவில் பாபர் மசூதி கட்டிமுடிக்கபடதவரை...
இசுலாமியர்களுக்கு சமயுரிமை கொடுக்கபடதவரை...
இசுலாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தடுத்து நிறுத்தபடவரை...
இந்தியா ஜனனயநாடு என்றோ, இந்தியா ஒரு சுதந்திர நாடு என்றோ,
இந்தியாவின் இறையாண்மை பற்றிபேசவோ. எந்த நாய்களுக்கும்  தகுதி  இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...

Sunday, December 4, 2011

மழை...


மாலை நேரம்
பூங்கா ஒன்றிற்குள் நுழைந்தேன்...

உடல் சுமை குறைக்க
ஒருகூட்டமும்
மன சுமை இறக்க
ஒருகூட்டமும்
அங்கும் இங்குமாய்...

உதிர்ந்துபோன நினைவுகளை
அழகாய் கொர்த்துகொண்டிருன்தது
வயதான தம்பதிகள்...

மரங்களெல்லாம்
காதலர்களுக்கு மறைவிடமாய்
சிலமரங்கள்-
கன்னைமூடிகொண்டன
சிலமரங்கள்-
ஓரகன்னல் பார்த்தது கொண்டன
சிலமரங்கள்-
அவர்களயே பார்த்து கொண்டிருந்தது...

குழந்தைகளின்
உதைகளுக்கு அஞ்சி
சிதறி ஓடிகொண்டிருந்தது
பந்துகள்!

வேலைதேடுபவன்...
காதலைதொலைத்தவன்...
அன்புக்கு ஏங்குபவர்கள்...
புர்க்களை பித்து கொண்டிருந்தனர்

கடலைவியபாரி
பூக்காரம்மா
பிச்சைகாரர்கள்
காற்றுகிழிய கத்திகொண்டிருந்த்னர்...

நள்ளிரவில்
வானம் துளைத்து
விண்மீன் தேடிகொண்டிருந்தபோது 

மேகம் வெடித்து
ஓவென கொட்ட தொடங்கியபெருமழை...
 பூங்காவிற்குவெழியே -
அடித்து தள்ளியது
மனிதர்கள் இறக்கிசென்ற
சுமைகளையும்...
என்னையும்...

Sunday, November 27, 2011

மாவீரர் நாள்...



நாற்பதாண்டுகாலம் அறபோரட்டத்திலும்
இருபத்தியைந்து ஆண்டுகாலம்
ஆயுதபோராட்டத்திலும் களமாடி... எம்
மண்ணின் விடுதலைக்காக
வீரச்சாவடைந்த மாவீரர்களின்
ஈகை திருநாளில்...

தோழர்கள் விட்டுசென்றதை
தொடர்ந்து செய்வோம்...

எதிரியும்...
துரோகியும்...
ஒழிக்கப்படும்வரை
அவர்கள் விட்டுசென்ற
ஆயுதங்களை பத்திரபடுத்துவோம்...

வீதியெங்கும்
சிதரிகிடக்கும் -எம்
மாவீரர்களின்
ரத்தங்களைவைத்தே
ஆயுதங்களுக்கு புத்தியிர்
கொடுப்போம்...

தனி ஈழம் கிடைக்கும்வரை
போராடுவோம்....
தலைவரின் ஆணைக்காக
காத்திருப்போம்...
சுதந்திர ஈழம்
வென்றெடுப்போம்...

மாவீரர்களின்
ஈகை போற்றுவோம்.


மாவீரர் நாள்...27.11.2011



Wednesday, November 16, 2011

தூக்கு தண்டனை காட்டுமிராண்டிதனமானது


"ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்டபூர்வமாக இருக்கலாம் ஆனால் அது காட்டுமிராண்டிதனமானது வாழ்க்கைக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது, பொறுப்பற்றது" 'தூக்கு தண்டனை விதிப்பதர்க்குமுன்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளை மிகவும் கவனமாக ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும்'
மரணதண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திரு ஏ.கே கங்குலி அவர்கள் சொன்னது 

Tuesday, November 15, 2011

முகமூடி


               நேற்றிரவு Resortல்(14.11.11)  நடந்த கலைநிகழ்ச்சியில் என்னுடைய நடிப்பு அருமை என்று பார்த்த பலரும் பாரட்டிக்குவித்தனர், நன்றிகள். அவர்களுக்காக வருத்தபடுகிறேன். அவர்களுக்கு என்னைப்பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை.  அவர்களுக்கு எப்படி சொல்லுவேன்...
"நான் நேற்றிரவு நடிக்க கற்றுக்கொண்டு இன்றிரவு நடிக்கவந்தவனில்லையென்றும்"   வாழ்க்கை முழுவதுமே நடித்துகொண்டிருக்கும் ஒரு போலியென்றும்...

Saturday, November 12, 2011

லிபிய சுதந்திரம் ஒரு கேள்விகுறி?




நான் சர்வதேசத் தலைவன்
அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்
ஆப்ரிக்காவின் அரசன்
முஸ்லிம்களின் இமாம்
                      -லிபியா அதிபர் மம்மர் கடாபி

லிபிய போராட்டத்தின்போது உயிருக்கு பயந்து பாதாழசாக்கடையில் பதுங்கி கிடந்த கடபியயை ஒரு தெரு நாயை சுட்டு கொல்வதைபோல் சுட்டுகொன்றபோது காற்றில் நம்முன் பறந்துவந்த வார்த்தைகள் இவை

இன்று லிபிய மக்கள் சர்வாதிகாரத்தை ஒழித்து சுதந்திரலிபியாவில் தங்கள் வாழ்வதாக பிரகடனபடுத்திவிட்டார்கள்

காடபியிடம் இருந்து பெற்ற விடுதலையை  லிபிய மக்கள் அமெரிக்கா என்னும் ராட்ச்சசனிடம்  பறிகொடுத்திருப்பதுதான் சுதந்திரமா!  இந்த மிருகம் இன்னும் கொஞ்ச நாளில் தன் சுயரூபத்தை காட்டதொடங்கும்போது எங்கே ஓடி ஒழிவார்கள் அப்பாவி லிபிய மக்கள்? "சுதந்திரம் என்பதற்கு கெளரவம்" என்பதுதான் அர்த்தமே தவிர  அமெரிக்காவின் அடிமையென்று பொருளல்ல... இசுலாமிய நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் சர்வாதிகராட்ச்சிக்கு எதிராக போரடதுனிந்திருப்பது வரவேர்க்கவேண்டியதுதான். நாம் வரவேற்கிறோம்.   அதற்காக அவர்கள் அமெரிக்காவை துணைக்கு தேர்தெடுத்திருப்பது முட்டாள்தனமான முடிவோயென      அஞ்சதோன்றுகிறது . இப்போது லிபியாமீது அமெரிக்கா காட்டும் அக்கறை ஆடு நனைய ஓநாய் வருத்தபட்டகதைதான் "ஆதாரமில்லாமல் ஐய்யர் ஆத்தில் இறங்கமாட்டார்"  அமெரிக்காவும் இசுலாமிய நாடுகளின் எண்ணை வளங்களை குறிவைத்தே காய் நகர்த்துகிறது இது தெரிந்தும் புரட்ச்சி என்றபெயரில் அமெரிக்காவுடன் கைகோர்த்திருப்பது லிபிய மக்களின் அறியாமை என்பதைத்தவிர வேறென்ன சொல்ல... உலகின் ஒட்டுமொத்த எண்ணை வளத்தில் இரண்டு சதவிதம் லிபியாவில் இருக்கிறது, இந்தவளத்தின் மிது தங்களிக்கிருந்த ஆசையை லிபியமக்களின் மீதான பாசமென  சப்பைகட்டு கட்டுகிறது அமெரிக்கமற்றும் ஐரோப்பிய நாடுகள். லிபிய புரட்ச்சிகரர்களுக்கு பிரிட்டிஷ் எண்ணை நிறுவனமான வீடோல் இங்க்லாந்து அமைச்சர் ஆலன் டங்கன் மூலமாக 5000கோடி ரூபாய் கொடுத்துள்ளது(சொந்த நாட்டையே தீக்கிரையாக்க ஆயுதம் வாங்க ).  அரபு நாடுகளின் எண்ணை வளங்களை தங்களின் நேரடிகட்டுபட்டில் கொண்டுவரும் முதற்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளதது அமெரிக்கமற்றும் ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் .

எது எப்படியோ லிபியாவில் ஜனநாயக ஆட்ச்சி மலர்ந்துவிட்டது! இப்போது மலர்ந்திருப்பது ஜனநாயக ஆட்ச்சியா இல்லை அமெரிக்காவின் ஏகதிபத்தியா ஆட்சியா என்பது போகபோகதான் லிபிய மக்களுக்கும் உலகிற்கும் தெரியவரும் 

 42 ஆண்டுகால கடாபியின் ஆட்ச்சிகலத்தில் ஏற்ப்பட்ட எண்ணற்ற வளர்ச்சிகள்என அப்ப்ரிக்கநாட்டிலே லிபியாவில்தான் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற மருத்துவ கட்டமைப்பு, ஒவ்வொரு லிபியனுக்கும் சொந்தவீடு, கல்வியும் சுகாதாரமும் நாட்டின் முக்கியமாக ஒன்ற்றகருதபட்டது. சின்ன தொழில்கள் மக்களிடமும் பெரியதொழில்கள் அரசிடமும் இருக்க வேண்டுமென்கிற பொருளதரவியுகம். 2010 கூட லிபிய உள்ளநாட்டு உற்பத்தியில் 10.6 சதவிதம் வளர்ச்சி என அடிக்கிக்கொண்டே போகலாம், இதே மக்கள்தான் கடாபியை ஆபிரிக்காவின் சே என அழைத்தார்கள். இறந்து போன கடாபியின் பெருமை அல்லது சிறுமை பேசி இனியென்ன பயன் எல்லாம் முடிந்துபோயிற்று.

கடாபி லிபிய வளர்ச்சிக்கு பல தொலைநோக்கு திட்டங்கள் செய்திருந்தாலும் கடைசிவரை ஜனநாயகம் என்றவார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால் மக்களால் தூக்கி எரியபட்டிருக்கிறார் எந்த அடக்குமுறைகளும் மக்கள் போராட்டங்கள் முன் நிற்கமுடியாது என்பதற்கு கடபியே பெரிய உதாரணம்...மக்கள் போராட்ட புயலுக்குமுன்னல் எந்த சர்வதிகாரமும், அடக்குமுறைகளும், ஆட்ச்சியாளர்களும் நிர்க்கமுடியாமல் தூக்கிஎரியபடுவார்கள் இந்த நிலை கண்டிப்பாக ஒருநாள் அமெரிக்காகவும் வரும்... தொலைவில் இல்லாத காலமது .

இனி லிபியாவின் நிலைமை!!!???

ஜனநாயகத்துக்காக சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஏகாதிபத்தியத்திடம் சரண் அடைந்து இருக்கிறார்கள் லிபிய மக்கள். வேறென்ன சொல்ல?

Wednesday, November 9, 2011

தமிழக அணுஉலைகள் ஒரு சிறப்பு பார்வை...2

(இந்த கட்டுரை நான் இணையதளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் படித்தது எந்த இணையதளத்தில் படித்தது என்று ஞாபகம் இல்லை மன்னிக்கவும் இந்த கட்டுரைகளில் குறிப்பிடபட்டிருக்கும், அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி,  பூஉலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமாரன். போன்றவர்களை பற்றிய தகவல்கள் கட்டுரைகள் இணையதளங்களில் ஏராளமாக இருக்கின்றது)

 


''மாற்றி யோசிக்கலாமே!''

அணு மின்சாரத்துக்கு மாற்றாகச் சில யோசனைகளை முன்வைக்கிறார் 'பூவுலகின் நண்பர்கள்அமைப்பைச்சார்ந்த சுந்தர்ராஜன்.


''
இந்தியாவிலேயே இரண்டு அணு உலைகள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டும்தான். மின்சாரத்துக்காக அணு உலை என்று சொல்வது, பீரங்கியைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிப்பது போன்றது! இந்தியாவின் மின்சாரத் தேவை தற்சமயத்தில் 1,70,000 மெகாவாட். ஆனால், நாடு முழுக்க இருக்கும் 20 உலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ வெறும் 4,780 மெகாவாட் மட்டும்தான்!தமிழகத்தில் மட்டுமே குண்டு பல்புகளை நீக்கி விட்டு சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்தினால், சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தினால், பெருமளவு மின்சாரம் மிச்சமாகும்! 2030-ல் நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நம் மின்சாரத் தேவை 6 முதல் 8 லட்சம் மெகாவாட் ஆக இருக்கும். அணுவைப் பயன்படுத்தி அதில், 6 முதல் 12 சதவிகித மின்சாரத் தேவையைத்தான் பூர்த்திசெய்ய முடியும் என்று அணு சக்தி ஆணையமே தெரிவித்து இருக்கிறது.மின்சாரத்தை உற்பத்தி செய்து அதைப் பகிர்ந்து அளிக் கும்போது, குறிப்பிட்ட சதவிகிதம் இழக்கிறோம். அதாவது, Transmission & Distribution Loss. உதாரணமாக: 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரித்தால், இறுதிப் பயன்பாட்டுக்கு 8,000 மெகாவாட்தான் நம்மிடம் இருக்கும். 2,000 மெகாவாட் பகிர்ந்தளிக்கும்போது வீணாகிவிடும். 2008-ல் 'வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்நடத்திய ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக மின்சார இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 27 சதவிகிதம் வீணாகிறது. இதைக் குறைப்பதில், கவனம் செலுத்தலாம்!அணு மின் நிலையம் மூலமாக மின்சாரம் தயாரித்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்பது, அதை ஆதரிப்பவர்களின் முக்கிய வாதம். ஆனால், அது முற்றிலும் தவறு. இயற்கையாகவே யுரேனியம் 238 கிடைக்கிறது. இதைச் செறிவூட்டினால் யுரேனியம் 35 கிடைக்கும். இதைத் தயாரித்தால்தான், அணு உலையின் செயின் ரியாக்ஷன் நடக்கும். இந்த யுரேனியத்தை எடுக்கும்போது கரியமில வாயுக்கள் வெளியேறும். ஆகவே, அணு மின்சாரம் மூலமாகவும் சூழல் கெடத்தான் செய்யும்.காற்றாலைத் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின்சாரம், பயோமாஸ் எனப்படும் உயிர்த்திரள், புவிவெப்பச் சக்தி என மரபு சாரா முறையில் மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஆபத்து அதிகமான அணு சக்தி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே உலகை நேசிக்கும் அனைவரின் கேள்வி!'' என்கிறார் சுந்தர்ராஜன்.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் குறைபாடுகளாக அந்தப் பகுதி மக்கள் முன் வைக்கும் பிரச்னைகள்!

அணு சக்திக் கழிவைக் கடலில் கலக்கிறார்கள். அதனால், கடல் நீர் உஷ்ணமாகி, மீன் வளம் குறைகிறது. நிலத்தடி நீர் வளமும் குறைந்துவிட்டது.அணுக் கழிவுகள் கலப்பதால், கடலில் உள்ள பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. அதனால், கடல்சார் சுற்றுச்சூழல் கெடுகிறது.தைராய்டு புற்று நோய், கரு கலைதல், மூளை வளர்ச்சி இன்றிப் பிறக்கும் குழந்தைகள், கை-கால் போன்ற உறுப்புகள் இன்றி குழந்தைகள் பிறத்தல் போன்றவை கதிர்வீச்சாலும் ஏற்பட்டு இருக்கலாம். மேலும், கதிர்வீச்சுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பணியாற்றுபவர்களுக்கு உயிரணுக்களும் குறைவாக இருக்கின்றன.அணு மின் நிலையத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில், நிலையத்தில் பணியாற்றுபவர் களுக்கு மட்டுமே அனுமதி. அங்கு யாருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் கொடுப்பது இல்லை.அந்த மருத்துவமனையில் அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி, கதிர்வீச்சு தொடர்பான விபத்துக்களைக் கையாள்வதற்கான சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லை.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை. உதாரணம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு நடவடிக்கை பயிற்சி நடத்த வேண்டும் என்பது சட்டம். ஒரு முறை அந்த நடைமுறையின்போது மக்களை அவசரமாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றும் வாகனம் பஞ்சராகி நின்றது. வாக்கி-டாக்கி வேலை செய்யவில்லை!
கதிர்வீச்சு மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சில தகவல்கள்...

கதிர்வீச்சைப் பொறுத்தவரை மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை!

2005-
ம் ஆண்டு ஜனவரியில் எக்ஸ் கதிர்கள், காமா கதிர் கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது!அணுசக்தித் துறையில் மிகவும் முக்கியப் பிரச்னை, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் கடல்வாழ் தாவரங்களில் எந்த அளவு இருக்கிறது என்பதை கல்பாக்கம் அணு நிலையத்தார் அளப்பதே இல்லை!கதிர்வீச்சினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாகக் கண்டறியவே முடியாது என்பதுதான் இன்று நிதர்சனம்! உதாரணமாக, உடலில் கதிர்வீச்சு நேரடியாக ஸ்பரிசிக்காத உறுப்புகளிலும் ஏற்படும் பாதிப்பை By Stander Effect என்பார்கள். கதிர்வீச்சுப் பாதையில் உள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும் பிரச்னை இது!
கூடங்குளம் நிலவரம் என்ன?


தகவல்: ஆமையடி அ மகேஷ்
நாடெங்கும் அணு மின் நிலையங்கள் அமைப்பதுபற்றி விவாதங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், திருநெல்வேலி கூடங்குளத்தில் வருகின்ற ஜூன் மாதம் முதல் அணு மின் நிலையம் இயங்க இருப்பதாகச் செய்தி! அதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமாரன்...


''
இந்த அணு மின் நிலையத்தை கடல் மணல் கலந்து கட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் நான் ஜெய்தாபூர் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, தாராபூரில் ஒரு ஒப்பந்தக் காரரைச் சந்தித்தேன். அவர் கூடங்குளத்தில் எட்டு ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்த்தவர். அங்கு நிறுவப்படும் பைப்கள் எல்லாம் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. எளிதில் உடைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவித்தார். கூடங்குள அணு மின் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.கே.அகர்வால், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்வதாக முன்பு ஒருமுறை தெரிவித்தார். இந்தத் திட்டம் ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிச் செயல்படுத்துகிற திட்டம். இதுவரை எத்தனை முறை கடன் வாங்கி இருக்கிறார்கள்? அத்தனை கோடி ரூபாய்களுக்கு என்னென்ன செலவுகள் செய்து இருக்கிறார்கள்? ஏற்கெனவே நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் கட்டு மானப் பணிகள் நடைபெறுகின்றனவா? இல்லை தாண்டி விட்டதா? எல்லாம் கேள்விகள்தான்!ஒரு வருடத்துக்கு முன்பு எஸ்.கே.அகர்வால், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். அணு மின் நிலைய இயக்குநராக இருந்தவரை, பதவி உயர்வு கொடுத்து, அணு சக்தி தொடர்பான பல்வேறு திட்டங்களில் நல்ல பதவி கொடுத்து, அவரை மாற்றல் செய்தார்கள். அப்படிப்பட்டவர் இறந்துபோன தகவல் குறித்து இதுவரையில் தகவல் வெளிவரவில்லை!சர்வதேச அணு சக்தி வல்லுநர்கள் குழு (World Association of Nuclear Operators - WANO) சில வருடங்களுக்கு முன்பு கூடங்குள அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் அந்த அணு மின் நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் கூட இருக்கவில்லை. அவர்கள் என்ன வகையான பரிசோதனைகளைச் செய்தார்கள், எதையேனும் ஆய்வு செய்து விளக்கம் அளித் தார்களா என்பதுபற்றி விவரங்கள் கேட்டு நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப் பித்து இருந்தேன். இதுவரைக்கும் பதில் இல்லை.இப்போதைய அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி, ஜப்பானில் நடந்த அணு மின் நிலைய விபத்து பற்றி ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறார். சுனாமிக்குப் பிறகான கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் இந்த நிலையத்தைக் கட்டி இருக்கிறோம் என்கிறார். ஆனால், யார் அதை அளந்து பார்த்தது, அணு சக்தித் துறை நீங்கலாக, தன்னாட்சி அமைப்புகள் எதுவும் பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதைப்பற்றி எந்தக் கருத்தும் கூற மறுக்கிறார்!'' என்கிறார் உதயகுமாரன்!

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!