Sunday, October 30, 2011
Wednesday, October 26, 2011
தீபாவளி...
எவன்செத்தாலும்
குடி கூத்து
நரகாசுரன் காலத்திலேயே
ஆரம்பித்துவிட்டது
தமிழனின் பண்பாடு|!
தமிழர்களை
அறிவளியக்கவே
ஏழாம் அறிவுபோன்ற
படங்கள்!!
திதி நாளை
துக்கநாளாக கடைபிடிக்கும்
தமிழன்
நரகாசுரன் திதியைமட்டும்
ஊத்தி கொண்டாடும்
வினோதம்!!!
துக்கநாளாக கடைபிடிக்கும்
தமிழன்
நரகாசுரன் திதியைமட்டும்
ஊத்தி கொண்டாடும்
வினோதம்!!!
நாம் வெடிக்கும்
ஒவ்வொரு வெடியும்
ஒரு குழந்தை தொழிலாளியை
உருவாக்கி- அவன்
வறுமையும் வலியும்தான்
நாம் பற்றவைக்கும்போது
வேடித்துசிதருகிறது
இருக்கிறவன்
தின்று தூங்குகிறான்
இல்லாதவன்
ஏங்கி சாகிறான்
எப்போது புதுஆடை
என்ற ஏக்கத்தில்
அழுது தூங்கி போகும்
குழந்தைகளுக்கு நாம்
சொல்லுவோம்
ஒருநாள் நரகாசுரனும்
வதம் செய்வான்
அதுதான் நம் தீபாவளி...
Friday, October 21, 2011
Monday, October 17, 2011
பசித்தவனுக்கு உணவு கொடுப்போம்...
வற்றிப்போன
காம்புகளை
எத்தனைமுறை
கவ்விழுத்திருக்கும்
அந்த பிஞ்சு உதடுகள்
கடைசிசொட்டு
ரத்தம்வரை
பிழிந்து கொடுத்துவிட்டு
காய்ந்து கிடக்கும்
இவளுக்காவது
ஏதாவது கொடுங்கள்
குழி மூடும்வரையாவது
இவள் உயிர்வாழவேண்டும்
இல்லையேல்
பிணம் தின்னி
கழுகள்...
குழந்தையும்
இவளையும்
தின்று தன்
பசிபோக்கொள்ளும்...
"தயவுசெய்து உணவு பொருள்களை வீனாக்காதிர்கள்"
Sunday, October 16, 2011
Saturday, October 15, 2011
Tuesday, October 11, 2011
நண்பன்
நண்பா
ஓய்வாக இருந்தால்
என் கல்லறைக்கு வா
இங்கிருக்கும் அத்தனை
பூக்களுக்கும்
உன்பெயரும் என்பெயரும்
பரிட்ச்சயம்...
கண்ணில் ஏதாவது
குயில் தென்பட்டால்
கொஞ்சம் செவிமடுத்து கேள்
நிச்சயமாய்
உன்னையும் என்னையும்தான்- அது
பாடிதிறியும்...
உணர்ச்சிவசப்பட்டு
கல்லறையை மட்டும்
திறந்துவிடாதே
இன்னும் அப்படியே
இருக்கிறது- நீ
என் நெஞ்சில் குத்திய
கத்தி!
Saturday, October 8, 2011
Friday, October 7, 2011
முதல் கவிதை
காதலும்
தனிமையும்
கவிதையின்
ஊற்று - இரண்டும்
இருந்தும் எனக்குள்
கவிதைவரவில்லை
எதுகையும் மோனையும்
கவிதையின்
அழகு...
எழுதவே தெரியாதஎனக்கு
இந்த இரண்டும் தெரியாதது
ஆச்சரியமில்லை.
கவிதையின்
அழகு...
எழுதவே தெரியாதஎனக்கு
இந்த இரண்டும் தெரியாதது
ஆச்சரியமில்லை.
மெய்யெழுத்து
உயிரெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுதழுத்து
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
டிவி தொடர்போல...
நீண்டு கொண்டே போகிரதுதமிழ்
எனக்குள் வரவில்லை கவிதையாய்
உயிரெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுதழுத்து
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
டிவி தொடர்போல...
நீண்டு கொண்டே போகிரதுதமிழ்
எனக்குள் வரவில்லை கவிதையாய்
எடுத்த பேனாவை
கவிதை எழுதாமல்-
வைப்பதா?
கவிதை எழுதாமல்-
வைப்பதா?
கிறுக்கி தள்ளினேன்.
இறுதியாய்
எழுதி எழுதி
குவிக்கப்பட்ட
காகித குப்பைக்குள்
கண்ணைமூடி கைவிட்டேன்
எழுதி எழுதி
குவிக்கப்பட்ட
காகித குப்பைக்குள்
கண்ணைமூடி கைவிட்டேன்
கையில் சிக்கியதில்
எழுதியிருந்தது
எழுதியிருந்தது
அம்மா அப்பா.
Sunday, October 2, 2011
Subscribe to:
Posts (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
-
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...