Friday, October 7, 2011

முதல் கவிதை














காதலும்
தனிமையும்
கவிதையின்
ஊற்று -  இரண்டும்
இருந்தும் எனக்குள்
கவிதைவரவில்லை

எதுகையும் மோனையும்
கவிதையின்
அழகு...
எழுதவே தெரியாதஎனக்கு
இந்த இரண்டும் தெரியாதது
ஆச்சரியமில்லை.

மெய்யெழுத்து
உயிரெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுதழுத்து
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
டிவி தொடர்போல...
நீண்டு கொண்டே போகிரதுதமிழ்
எனக்குள் வரவில்லை கவிதையாய்

எடுத்த பேனாவை
கவிதை எழுதாமல்-
வைப்பதா?

கிறுக்கி தள்ளினேன்.

இறுதியாய்
எழுதி எழுதி
குவிக்கப்பட்ட
காகித குப்பைக்குள்
கண்ணைமூடி கைவிட்டேன்
கையில் சிக்கியதில்
எழுதியிருந்தது


அம்மா அப்பா.


No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!