பஞ்சமி
நிலத்தை
பறிகொடுத்தவனிடம்
கேளுங்கள்
ஒரு ஏக்கர்
பூமியையும்
எட்டுவழி
சாலைக்கு
இழந்தவனிடம்
கேளுங்கள்
மகளின்
கல்யாணத்திற்க்காக
வட்டிகாரனிடம்
வயலை இழந்த
தந்தையிடம்
கேளுங்கள்
பொங்கலின்
சுவை என்னவென்று!
வா தோழனே
இனி ஒரு
பொங்கல் படைப்போம்
உழைத்தவனை
சுரண்டி வாழும்
அதிகார வர்க்கத்தையே படையலிட்டு
இனி ஒரு
பொங்கல் படைப்போம்...
அனைவருக்கும் இனிய
பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
தோழமையுடன்
ஆமையடி அப்துல்லா