என்னவேண்டுதலோ ஹீமாவுக்கு
அலுவலக பிள்ளையார் சிரிக்க
தினம் ஒரு பூகொல்கிறாள்
சுமங்கலியாய் இருந்த செம்பருத்தி
அமங்கலியாய் நிற்கிறது ஹிமாவின்
பிள்ளையாருக்காக...
சீக்கிரம் அவள் வேண்டுதல் பலிக்க
பூக்கள் உதிர்த்து தவம் கிடக்கிறது
கொல்லப்புறத்து செம்பருத்தி...