நான்...

சொல்லிகொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை, சாவதற்குமுன் ஏதாவது செய்துவிட தூக்கம் தொலைத்து முயற்ச்சித்து கொண்டிருப்பவன்...


உங்களின்...
அன்பு
பாசம்
கோபம்
வெறுப்பு
புறக்கணிப்பு
சட்டம்
சமுகம்
எதுவும் என்னை
ஒன்றும் செய்துவிடமுடியாது என்ற கர்வத்தில் வாழ்வதால்  என்னவோ என்னை நானே காயபடுத்திகொள்கிறேன்.

எனக்கு 
நானே எதிரி 

நண்பர்களே
இல்லாததால்
எனக்கு நானே
நண்பன்

உறவுகளே
இல்லாததால்
எனக்கு நான்
மட்டுமே
உறவு

இரவு
என் தனிமைமுழுவத்தையும்
தின்றுவிடுவதால்
அத்தனை இரவுகளையும்
சபிக்கிறேன்

பகல்
அதன் சுமைகளை
என்மீது திணிப்பதால்
அத்தனை பகலையும்
வெறுக்கிறேன்

சினிமாஎன்னும்
சிலுவையில்
என்னை நானே
அரைந்துகொண்டு
விடுபடமுடியாமல்
துடித்து கொண்டிருபவன் 

மரணம் 
அதன் கதவுகளை
திறந்து என்னை
அள்ளிகொண்டுபோகும்
அந்தநாளே
என் வாழ்வின்
தவம்.

சீக்கிரமாய் 
என் கல்லறையை
திறந்துபாருங்கள்
சலனமற்று கிடக்கும்
என் சடலம்
எந்த கவலையும்மின்றி
கண்டிப்பாய் கண்மூடிகிடக்கும்.

என்  இதயம் மட்டும்
உங்களோடு ஏதோ
பேச முயற்சிக்கலாம் 

தொலைந்து போக விருப்பம் இல்லாமல்
தொலைந்து போனவன் நான்

-ஆமையடி அமகேஷ்
    

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!