Thursday, July 14, 2011

கோழைகளுக்கு உடனே தண்டனை வழங்குங்கள்...








             மாமிசம் தின்னும் மனிதன். மலமும் புல்லும் தின்னும் காலம் விரைவில் வருமோ என்றே என்னே தோன்றுகிறது. நேற்று(13.07.11) மும்பையில் நடந்த சோக சம்பவம். எத்தனைதான் மனிதன் முன்னேறினாலும் அவன் இன்னும் மிருகங்கள் அளவிற்கு  முன்னேறவில்லை! எந்த மிருகமும்  தன் இனம் மீது இப்படி ஒரு செயலை செய்யாது, செய்ததும் இல்லை.

" ஒரு வேளை ஆறாவதுஅறிவு என்பது மனிதனின் சாபமோ"


இந்த செயலை எவன் செய்தாலும் அவன் உடனே தாண்டிக்கபடவேண்டியவன்.  2008ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுறுவி கொலை வெறித் தாக்குதலை நடத்திய 10 பேர் கொண்ட பாகிஸ்தானிய தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த கசாப்புக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது   இது உண்மைஎன்றல் உடனே இந்த கசப்புக்கு இந்திய அரசு பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும்.

மத வெறியர்களே உங்களுக்கு இந்திய அரசோடு  பிரச்சனைஎன்றல் அரசியல் வாதிகளோடு நேரடியாக மோதுங்கள், அதை விட்டுவிட்டு அப்பாவி பொதுமக்களிடம் உங்கள் கோழைத்தனத்தை காட்டுவது அவமானம்.  உங்களுக்கு என்ன துரோகம்  செய்தார்கள் செத்துப்போன 21 பேறும்,  காயமடைந்த  150 அப்பாவிகளும்.

எந்த மதம்ட  இதையெல்லாம் உங்களுக்கு போதிக்கிறது. மனிதன்  திருந்த கொண்டுவரப்பட்டதே மதம் கடைசியில் அதற்கே மதம் பிடிக்க வைத்துவிட்டேர்களே.

இந்திய அரசே உடனடியா நடவடிக்கை  ஏடு மதவாதத்தை   எவன்    கையி எடுத்தாலும் அவனை உடனே ஒடுக்கு. இன்னும் பாதுகாப்பை அதிகபடுத்து மதங்களை விட மனித உயிகளே பெரிது.

தோழர்களே நிங்களும் நானும் மதத்திற்குள்ளும், ஜாதிக்குள்ளும் இருக்கும்
வரை இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே முடியாது.

இறந்தவரின் குடும்பம்களுக்கு உதவிகரம் நிட்டுவோம்!
காயபட்டவனுக்கு மறுவாழ்வு கொடுப்போம்!!
வாருங்கள் தீவிரவாதத்தை ஒழிப்போம்!!! 

 :- தோழமையுடன்  ஆமையை மகேஷ்

1 comment:

  1. உன் எழுத்துக்கள் ஒரு மனிதனையாவது உருவாக்கட்டும்.. வாழ்த்துக்கள் நண்பா....

    ReplyDelete

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!