Monday, July 11, 2011

பள்ளிக்கு அனுப்பம்மா...



(பள்ளி செல்லும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தை. அம்மாவுக்கு எழுதும் கவிதை )

பால் மணம்
மாறும் முன்னே -என்னை
பால்வாடிக்கு
அனுப்பிய
அன்னையே
என்ன நினைத்தாய்
இன்று -என்னை
வேலைக்கு
அனுப்புகிறயே!

என் ஜோடி
பிள்ளையெல்லாம்
பள்ளிக்கு
உன்- பிள்ளை
நான் மட்டும்
வேலைக்கா ?

ஊரெல்லாம்
ஒன்று கூடி-விளையாட
உன் பிள்ளை
நான் மட்டும்
ஒண்டியாய்
உழைப்பதென்?

இரும்பு பட்டறையில்
ஈக்கு வேலையில்லை
இளகிய -என்
கரங்களுக்கு மட்டும்
வேலையா?

என்னை
பிஞ்சு குழந்தை
என்கிறாய் - நீ
ரேகை பார்க்கும்
கண்ணாடியில் கூட -என்
கை ரேகை தெரியவில்லையாம்.மங்கியது
ரேகை மட்டுமல்ல ...என் -அறிவும் தான்
பசி நடுக்கத்தாலும்
தூக்க களைப்பினாலும்
கம்பி மேல் விழவேண்டியடி
என் காலில் விழுகிறதம்மா

என் நெஞ்சில்
விழுவதற்க்குள்
என்னை
பள்ளிக்கு அனுப்பம்மா


என் அம்மா
என்னை
பள்ளிக்கு
அனுப்பம்மா .

20.05.200
5


No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!