Sunday, August 14, 2011

சுதந்திர தின வாழ்த்துக்கள்.





என்  பாட்டனும் முப்பாட்டனும்
வெள்ளையனிடம் அடிமையாய்
கிடந்தனர்...
நானும் என் அப்பனும்
உங்களிடம் அடிமையாய்
கிடக்கிறோம் -

வறுமை பசி.
கொலை கொள்ளை..
ஊழல் லஞ்சம்...
ஜாதி மாதம்  -நம்
தேசியகீதம்...

கற்புக்கு அஞ்சி இளமை திருமணம்!
ஆயுதங்களுக்கு அஞ்சும் அகிம்சை!!
கம்பிகளுக்கு அஞ்சி திறந்தேகிடக்கும் கதவுகள்!!!
குண்டு துளைத்துவிடும் பயத்தில்
கண்ணாடிக் கூண்டிற்குள் ஜனாதிபதி...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!