Wednesday, August 10, 2011

தலித் விடுதலையும் இந்து மத ஒழிப்பும்...


              தலித் என்பதன் பொருள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் போராளிகள் என்றும்ஜாதி என்பதற்கு கூட்டம்(கூடிவாழ்தல்) என்றும் பொருள்.   ஆனால் இங்கு தலித்,ஜாதி என்றவார்த்தைகளுக்கு கீழ் ஜாதி,தீண்டதகதவன்என்று பொருள் கொள்ளபட்டதால் நானும் அப்படியே துவங்கவேண்டியதாயிற்று.

              உலகம் முழுவதம் ஜாதி ஏற்றதாழ்வுகள் இருக்கதான் செய்கிறது ஆனால் இந்தியாவை போல எவரும் பிறப்பால் பிரிக்கபடுவதில்லை அவர்கள் செயும் தொழில்தான் அவர்களின் ஜாதியின் அடையாளமாக கருதபடுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை அவனது பிறப்பே தீர்மனித்துவிடுகிறது   இவன் உயர்ந்தவன் தாழ்தவனேன்று .  இதற்க்கு காரணம் இந்துமதமும் அதன் புனிதநூலான பகவத்கீதையும்தான்.

           சாதி அமைப்பை நிலைநிறுத்துவது என்பதே பகவத் கீதையின் மையக் கருத்தாக இருக்கிறது. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் என்று கூறுவதன்மூலமும் (பகவத் கீதை 4:13); மக்கள் தங்கள் சமுதாய நிலை முடிவு செய்யும் கடமைகளைச் செய்ய வைப்பதற்காக உண்மையை அவர்களிடம் சொல்லக்கூடாது என்று சொல்வதன்மூலமும் (பகவத் கீதை 3:26, 29) நம்மால் இந்துமதத்தின் கொள்கையை  புரிந்துகொள்ள முடியும்  அதனால் தான் இந்துமதத்த்தின் அழிவில் தான் ஜாதி  விடுதலை இருக்கிறது. இந்துமதம் ஒழிக்கபடாதவாரை ஜாதி விடுதாலைபெறமுடியாது என்பதை அம்பேத்கர்  தான் வாழ்நாள் முழுவதும் போதித்துகொண்டிருந்தார்  

             அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு கண்மூடித்தனமானதல்ல. அறிவுப்பூர்வமான அணுகுமுறையோடு இந்துமதத்தின் கூறுகளை அவர் ஆய்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் தற்கால நிலைமைக்கு இந்து மதமே அடிப்படை என்று அறிந்து கொண்டார். இந்தியாவில் இன்று நிலவும் சாதி முறைக்கும், அதன் மூலமான நால்வர்ண பாகுபாட்டுக்கும் ஆதாரமே இந்து மதம்தான். பார்ப்பன-சத்திரிய கூட்டம் ஆளவும், வைசியக் கூட்டம் சுரண்டவும், சூத்திரக் கூட்டம் உழைக்க வும் ஏற்படுத்தப்பட்ட தந்திரமானதும், நயவஞ்சகமான  ஏற்பாடே இச்சாதி முறை. என தெளிவாக குறிப்பிடுகிறார்

                 அம்பேத்கர்இந்து மதத்தின் வேதங்களை ஆபாசக் குப்பைகள் என்றும், பகவத் கீதையை ஒரு முட்டாளின் கிறுக்கல்கள் என்றும் கூறியவர் அவர். இந்து மதத்தை தன் வாழ்நாளின் கடைசி கணம் வரை தோலுரித்தார்.
இந்துமதத்தில் இருக்குவரை விடுதலை பற்றிபேசமுடியாது  "நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என்றார் பௌத்தனாக மதம் மாறினார். மதம் மாறினால் மட்டுமே ஜாதி இழிவை போக்கமுடியும் என மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறார்

            ஜாதி ஏற்றத்தாழ்வுகளை பின்பற்றும் தனிஒருவனை தண்டிப்பதாலோ, மனுதர்மத்தை சொல்லும் பகவத்கீதையை கிளிப்பதலோ, இந்து கோயில்களுக்கு வேடிவைப்பதாலோ, ஜாதி விடுதலை பற்றி பக்கம் பக்கமாக பேசுவதாலோ, ஜாதி வேறுபாடை களையமுடியாது. அதே சமயம் இந்துமதம் ஒன்றும் நாம் நினைத்தவுடன் கலைக்கும்  தேன்கூடும் இல்லை,   பார்ப்பனன் ,சத்திரியன் வைசியன் ,சூத்திரன் என பிரமிடு வடிவ தோற்றம் கொண்டது இந்துமதம். இதில் அடியில் இருக்கும் சூத்திரன் நினைத்தவுடன் வெளியே வரமுடியாது எனவே தன்னை பாதுகாத்து கொள்ளவும் இந்துமதத்தின் ஜாதி இழிவை போக்குவதற்கு மாற்று மாதத்தை தழுவுவதும்தான் ஒரே தீர்வு.


இந்தியாவில் கீழ்க்காணும் பிரிவுகளாக மதங்கள் இருக்கின்றன.
1) பார்ப்பனியத்தை (சாதிய அமைப்பை) அப்படியே உள்வாங்கிக் கொண்ட கிறிஸ்த்துவம்

2) பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட பவுத்தம்

3) பார்ப்பனியக் கூறுகளுடன் சாதிப் படிநிலை கொண்ட சனாதன (இந்து) மதம்

4) சீக்கியமதம் (இதுவும் ஒரு வகையில் இந்துமதம்தான்)

5) பார்ப்பனியத்திற்கு எதிரான நடவடிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் கொண்ட இசுலாம்.


கிறிஸ்தவமதம்
          இந்துமதத்தின் பின்பம் தான் கிறிஸ்தவமதம், வழிபாடும் முறையிலிருந்து இந்து மதத்தின் அத்தனை மூடநம்பிக்கைகளும் கிறிஸ்தவத்திலும் இருக்கிறது, இன்னும் நாடார் கல்லறை, வன்னியர் கல்லறை, முதலியார் கல்லறை, பறையர் கல்லறைன்னு தனிதனியாகத்தான் இருக்கு. இங்கு சமத்துவம் என்பது பைபுள் அளவில் மட்டும்தான் இருக்கு. கிறிஸ்தவமும் இன்னொரு இந்துமதம்தான் கிறிஸ்தவத்தை தழுவுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது .  தலித்தாக இருக்கின்றபோது அவன் பெறுகின்ற இடஒதுக்கிடு இயேசுவை பின்பற்றும்போது அவனுக்கு கிடைப்பதில்லை. அவன் தலித்தாகவே தொடர்கிறான்.


பௌத்தமதம்
         மனிதனுக்கு எல்லா உரிமைகளை சமாக கொடுக்கும், மனித வாழ்கைக்கு தேவையான அனைத்து நல் வழிகளை சொல்லும் ஒரே மதம் பௌத்தம் மட்டும்தான். எல்லா வரலாற்று ஆராசியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  பௌத்தம் இந்து மதத்தால் விழ்த்தபட்டு விட்டது என்பதே உண்மை பௌத்தமதத்திலும் தலித் தலித்தாகவே வாழ்கிறான் ஆனால் இந்துமதத்தில் இருந்து அனுபவிக்கும் கொடுமைகளைவிட இங்கு குறைவு.     


சீக்கியமதம்
        சீக்கியமதம் தோன்றி முன்னுறு நானுறு வருடங்களே ஆகிறது ஆரம்பத்தில் அந்த மதத்தை தழுவியவர்கள் அத்தனை பேர்களும் தலித்துகளே. காலப்போக்கில் முதலில் தழுவியவர்களின் ஜாதி(பிறப்பின் அடையாளம்) ஒழிந்து விட்டது  ஆனால் சமகாலத்தில் சீக்கியத்தை தழுவும்  அத்தனைபேருக்கும் ஜாதி அடையாளங்களும் இருக்கத்தான் செய்கிறது இவர்களின் ஜாதி அடையாளம் மாற இன்னும் முன்னுறு நானுறு ஆண்டுகள் பிடிக்கும். அதற்குள் பௌத்தத்தைபோல சீக்கியத்த்தையும் இந்துமதம் விழுங்கி விடுவதற்கு வாயப்பு இருக்கிறது காரணம் வளிபாடுமுறைகளில் சீக்கியமும் இந்து மதமும் ஒன்றுதான்கிறிஸ்தவத்தை தழுவுவதை காட்டிலும் சீக்கியத்தை தழுவுவது சிறந்தது எப்படிம் மூன்று நான்கு தலைமுறையில் ஜாதி ஒழிந்துவிடும்.

இந்து மதம்
            இந்துமதத்தை மதம் என்றோ மார்க்கம் என்றோ ஏற்கும்  மனநிலையில் நான் இல்லை. என்னை பொறுத்தவரை அது ஜாதியை உற்பத்திசெயும் ஒரு கழிவு தொழிற்சாலை. கடவுளுக்கு ஊர் முழுவதும் பொண்டாட்டி இருக்கும்  கடவுளை வழிபடும் பக்கதனுக்கு ஒரு பொண்டாட்டிதான் இருக்கவேண்டும்.  கடவுள் பொண்டாட்டிய சந்தேகபடுவார், போரின்போது வீரவசனம் பேசி உடன்பிறந்தவனையே கொல்லசொல்லுவார்.    இந்து மதத்தை நாம் விமர்சிக்க தேவையில்லை. வலிமையானது வாழும் என்ற டார்வின் கோட்பாடில்தான் வாழ்கிறதுஇந்துமதம். தலித் மக்கள் எல்லோரும் மதம் மாறும்போது இந்து மதம் தானாக அழித்துவிடும் இந்தியாவில் இருக்கும் என்பது சதவிதம் இந்துக்களில் நாப்பத்தியெட்டு சதவிதம் தலித்துள்கள் தான். தனக்குகீள் அடிமை இல்லைஎன்றகின்றபோது இந்துமதம் தானாக விழ்ந்துவிடும்.

இசுலாம்.
      பார்ப்பனியத்திற்கு (இந்து மதம்) எதிரான நடவடிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் கொண்ட ஒரே மதம்  இசுலாம் மட்டுமே. தற்போது உள்ள  சுழலில் இந்தியாவில் மற்ற எந்த மத்ததை தழுவதைகாட்டிலும் இசுலாமை தழுவுவதுதான் ஒரே தீவு. இசுலாத்தை தழுவதன்மூலம் அந்தநிமிடமே நம்மில் ஒட்டிகொண்டிருக்கும் ஜாதி களையபடுகிறது. அடுத்தநிமிடமே நாம் இஸ்லாமியர்களோடு சமமாக தொழுகைநடத்தலாம் எந்தபேதமும் அவர்கள் நம்மில் பார்ப்பதில்லை மற்றவர்களும் நம்மை "பாய்" என்று அழைக்கும் நிலைமைக்கு நாம் வந்துவிடுகிறோம், அதுவரை இந்துமதம் நம்மீது பூசிவைத்திருந்த சாதிசாயம் அந்தநிமேடமே வெளுத்துவிடுகிறது, நமக்கான சுயமரியாதையும் கிடைக்கிறது. அதே நேரத்தில் இஸ்லாமில் ஜாதி இல்லையென்றோ பிரிவுகள் இல்லையென்றோ முழு புசணிக்கயையும் சோற்றில் மறைக்கும் வேலையை நாம் பார்க்கவில்லை. இஸ்லாமில் ஷியா, சன்னி, அஹ்மதியா என்று ஆயிரம் மார்க்கங்கள் இருக்கின்றன  அதிலும் சன்னி,ஷியா முஸ்லீம்களுக்குள்ளேயே ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. பதின்மர் பிரிவு,இறுதி இமாம் பிரிவு என்று பிரிவுகள் இருக்கத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத், சுன்னத் வல்ஜமாத் இடையே பெரும் பிளவே இருக்கிறது . எதிர் பிரிவை சேர்ந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று நிர்பந்திக்கபடுவதும்  .  இஸ்லாமிய தலைவர்கள் பகிரங்கமாகவே சியா சன்னியை திருமணம் செய்யக்கூடாது, சன்னி ஷியாவை திருமணம் செய்யக்கூடாது, சுன்னத் வல்ஜமாத்தை திருமணம் செய்யக்கூடாது என்று அறிவிப்பதை நாம் மறைக்க விரும்பவும்மில்லை. இதை கொள்கை பிரிவு என்று தப்பித்து கொள்ளவும் நாம் விரும்பவும்மில்லைஅதே போல் தமிழ்நாட்டிலும் மரைக்காயர் கீழ்ஜாதி நாசுவ முஸ்லீமை திருமணம் செய்வதில்லை. மரைக்காயர் கீழ்ஜாதி பட்டாணி மேல்ஜாதி என்று திருமணம் செய்வதில்லை. சையது, மேல் மேல் ஜாதி என்று மற்றவர்களை திருமணம் செய்வதில்லை. இஸ்லாம் ஜாதிக்கு எதிரானதும் அல்ல. ஆண்களின் ஜாதி எப்போதுமே போகாது. பெண்கள் எந்த ஆணை திருமணம் செய்கிறாரோ அந்த ஜாதிக்கு போவார்கள் என்பது நபிகள் நாயகத்தின் (ஸல்) வழிகாட்டுதல்.   இஸ்லாமில் சாதி இல்லை என்று சொல்வது இஸ்லாமுக்கு மாறானது. கீழ்ஜாதி பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் கீழ்ஜாதி ஆணை மேல் ஜாதி பெண் திருமணம் செய்யலாகாது என்பதே வரைமுறை. இது நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறதுஉங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;49:13 என்றும் அல்லாஹ் அல்குரானில் தானே ஜாதிகளையும் கிளைகளையும் கோத்திரங்களையும் உருவாக்கியதாக கூறுகிறான். இந்த உலகத்திலேயே அல்லாதான் ஒருவரை மேலாகவும் மற்ற்வர்களை கீழாகவும் ஆக்குகிறான் “17:21. அடிமைகளும் எஜமானர்களும் சமமாக மாட்டார்கள் என்றும் அல்லாஹ் திருமறையில்கூறுகிறான்.  மற்றவர்கள் சொல்லுவதுபோல் இஸ்லாம் ஜாதியே இல்லதமதமல்ல, மதம் மாருபவர்களை  ஜாதி கண்ணோட்டத்தில், குருகியவட்டத்தில் அடைத்துவிடாத மார்க்கம் இசுலாம். பௌத்தத்திற்கும்,   சீக்கியமதத்திர்க்கும் மதம் மாறி ஜாதி இழிவுகளை போக்குவதற்கு நூறாண்டுகள் காத்துகிடப்பதைவிட  இசுலாத்தை தழுவதுதான் ஒரே வழி.
அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட...

இந்துமதத்தை ஒழித்து ஜாதி கொடுமையை வென்றெடுப்பதற்கு நம் கையில் இப்போது இருக்கும் ஒரே ஆயுதம் இசுலாம் மட்டுமே.


            மாற்றப்படி தலித் அறிவிஜீவிகளும்தலித் அல்லாத அறிவிஜீவிகளும், தலித்  அரசியல்வாதிகளும், தலித் அல்லாத அரசியல்வாதிகளும், இந்துமத தலைவர்களும் சொல்லுவதுபோல் கல்வி, பொருளாதாரம், பதவியில் உயர் நிலை அடைந்துவிட்டால் அவர்களின் ஜாதி அழிந்து விடும்மென்பது பொய்யான பரப்புரையே தவிர அதில் சிறிதளவும் உண்மையில்லை.
இது உண்மைஎன்றல் இந்தியாவின் சட்டத்தை எழுதிய அன்னல் அம்பேத்கர் இன்னும் தலித் தலைவரகதானே பார்க்கபடுகிறார், இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் கே.ஆர் நாராயணன் இன்னும் தலித்தின் குறியிடாகதானே பேசபடுகிறார், அரசியலுக்கு எளிய இலக்கணமாக கருதப்படும் காமராஜருடன் இருந்து அவரைவிட எளிமையாகவும் தூய்மையாகவும் வாழ்ந்து தன் வாழ்நாள் இறுதியில் மதுரை ராஜாஜி மருத்துவமானை வரண்டாவில் அனாதையாய் செத்து கிடந்த கக்கன் அவர்களயும் இந்த சமுகம் தலித்தகதனே பார்க்கிறது காமராஜருக்கு கொடுத்த மரியாதையை எப்போதாவது கக்கனுக்கு இந்த அரசாங்கம்/சமுகம் கொடுத்ததை நீங்கள் பார்த்ததுண்டா. இப்போது இருக்கின்ற நாடாழுமன்ற சபாநாயகர் திருமதி மீராகுமாரியைகூட இந்த சமுகம் தலித்தாகதானே பார்க்கிறது உத்திரபிரதேசத்தை செல்வி மாயவதிதான் ஆழுகிறார் அதனால் அவரின் ஜாதி ஒழிந்துவிட்டதா  இங்கு ஜாதிஎன்பதை பிறப்புதான்(இந்துமாதம்) தீர்மானிக்கிறதே தவிர பணமும் பதவிம்மல்ல. இந்தியாவி மிகபெரிய பணக்காரர் திரு அம்மபனி அவர் இன்னும் BC  யாகத்தானே பர்க்கபடுகிறார் வாழ்கிறார்.  ஜாதி ஒழிப்பு என்பது இந்து மதத்தின் ஒழிப்பில்தான் இருக்கிறதே தவிரா கல்வி, பணம், பதவியில் இல்லையென்பதே உண்மை.      


இங்கு தலித் விடுதலையே இந்துமதத்தின் அழிவில் தான் இருக்கிறது என்றார் அன்னல் அம்பேத்கர். இந்தவேலையை எந்தமதம் செய்தாலும் நாம் அந்தமதத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...

                                                                               பாமரன்
                                                                     ஆமையடி அ.மகேஷ்

2 comments:

  1. தயவு செய்து அல்குர்ஆனை தெளிவாக படிக்கவும்,முழுமையாக படிக்கவும்...நீங்கள் சொல்லும் கோத்திரம் என்பது சாதி ஏற்றத்தாழ்வு இல்லை..ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் ஒரு பெயர் உண்டு..அவர்களை அடையாளபடுத்தி கொள்வதற்க்காகவே தவிர உயர்ந்தவர்,தாழ்ந்தவர் இல்லை...அதேபோல் நீங்கள் சொல்லும் சன்னி,ஷியா,மரக்காயர் இதுபோன்றவைகளை மனிதர்களாகவே உருவாக்கி கொண்டதே தவிர இஸ்லாம்,அல்குர்ஆனும் இதை கடுமையாக எச்சரிக்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு காலம் கடந்த பதில் அதற்கக்க மன்னிப்பு கோருகின்றேன் இது நான் கைவிட்ட ஓர் Blog அதனால் உங்கள் எதிர் கருத்தை என்னால் பார்க்க முடியவில்லை, நீண்ட நாளுக்கு பிறகு இன்றுதான் பார்த்தேன் இப்பொது உங்கள் கருத்தை ஏற்கிறேன் எல்லாம் காலம் தந்த படிப்பினை தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தோழமையுடன் அப்துல்லா

      Delete

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!