Tuesday, August 30, 2011

தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி...




தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு  இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை :

’’
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும்தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.  

அந்த அறிக்கையில், திருவாளர்கள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்

மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும்  என்று  தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்

தீர்மானம்

"
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

முடிவுரை:

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். ’’

********************************************************************************

மனிதர்களின் உணர்வுகளுக்கு மரியாதைகொடுத்து எம் உறவுகளை தூக்கு கயிற்றில் இருந்து மிட்டேடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும். தொடர்ந்து போராடுகின்ற, போராடிகிண்டிருக்கிற அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி...

எம் உறவுகளின் உயிர் காக்க தன் உயிரையே மாய்த்து கொண்ட என் அன்பு தங்கை செங்கொடிக்கு  வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்...

உறவுகள் மூவரும் விடுதலை அடையும்வரை போராடுவோம்...
ஒயகூடதுநாம் தூக்கு தண்டனையை இந்தியாவில் இருந்து ஒழிக்கும்வரை..

"பத்திரபடுத்திகொள்வோம் நம் தோழர்களின் கழுத்தில் இருந்து எடுக்கப்பட்ட தூக்குகையிற்றை. துரோகிகளுக்கு பயன்படும்"


நன்றி நன்றி நன்றி...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!