Sunday, December 4, 2011

மழை...


மாலை நேரம்
பூங்கா ஒன்றிற்குள் நுழைந்தேன்...

உடல் சுமை குறைக்க
ஒருகூட்டமும்
மன சுமை இறக்க
ஒருகூட்டமும்
அங்கும் இங்குமாய்...

உதிர்ந்துபோன நினைவுகளை
அழகாய் கொர்த்துகொண்டிருன்தது
வயதான தம்பதிகள்...

மரங்களெல்லாம்
காதலர்களுக்கு மறைவிடமாய்
சிலமரங்கள்-
கன்னைமூடிகொண்டன
சிலமரங்கள்-
ஓரகன்னல் பார்த்தது கொண்டன
சிலமரங்கள்-
அவர்களயே பார்த்து கொண்டிருந்தது...

குழந்தைகளின்
உதைகளுக்கு அஞ்சி
சிதறி ஓடிகொண்டிருந்தது
பந்துகள்!

வேலைதேடுபவன்...
காதலைதொலைத்தவன்...
அன்புக்கு ஏங்குபவர்கள்...
புர்க்களை பித்து கொண்டிருந்தனர்

கடலைவியபாரி
பூக்காரம்மா
பிச்சைகாரர்கள்
காற்றுகிழிய கத்திகொண்டிருந்த்னர்...

நள்ளிரவில்
வானம் துளைத்து
விண்மீன் தேடிகொண்டிருந்தபோது 

மேகம் வெடித்து
ஓவென கொட்ட தொடங்கியபெருமழை...
 பூங்காவிற்குவெழியே -
அடித்து தள்ளியது
மனிதர்கள் இறக்கிசென்ற
சுமைகளையும்...
என்னையும்...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!