"தர்மபுரி" எல்லாம் முடிந்திவிட்டது. இது
அரசியல் செய்வதற்க்கான நேரம் “எறிகிற வீட்டில் பிடிங்கிய
மட்டும் லாபம்” என்றநோக்கில்
பதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல்,
களஆய்வு, அறிக்கைகள் என வேட்டியை வரிந்துது
கட்டிக்கொண்டு களப்பணியாற்றுகிறது தமிழக கட்சிகள்!, சில
அமைப்புகள் ஒருபடி மேலே சென்று
நீதிமன்றத்தின் வாசலை தட்டுகிறது (கடந்தகால
அரசியல் தெரியாத கும்பல்) தமிழக
அரசும் தன் பங்குக்கு 50,000
ரூபாயை! அள்ளி இறைத்திருக்கிறது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு
குடும்பத்துக்கும், ஒருவாரமாக பத்திரிககளுக்கு நல்ல வியாபாரம், இணையதள
எழுத்தாளர்களெல்லாம் எழுதிகுவித்துவருகிரார்கள்,
கொஞ்சமும் அரசியல் ஞானமோ, சமுக
அக்கறையோயில்லாத ஒரு பெருங்கூட்டம் பின்னூட்டம்
எழுதி இணையத்தை நிரப்புகிறது.
இந்த கொடுரதாக்குதலுக்கு காரணமாக சொல்லபடுவது
ஒரு காதல் திருமணமும் அதன் பின்னல் நடந்த ஒரு தற்கொலையும்தான். அப்படி பார்த்தல் தலித்மக்களுக்கு
இதுவரை நடந்தகொடுமைகளுக்கு இதுதான் எதிர்வினைஎன்றல் ஒட்டுமொத்த தமிழகமும் ஹிரோசிமா
ஆகி தலைமுறை நூறு கடந்திருக்கக்கூடும். இது
முழுக்க முழுக்க பாமகவின் வன்னிய சாதிவெறியின் தாக்கமே தவிர வேறென்ன சொல்ல. பிள்ளையை
கிள்ளிவிட்டு இப்போது கோ.க மணியை வைத்து தாலாட்டும் வேலையை செய்கிறார் தமிழனபாதுகாவலர்
தமிழ்குடிதாங்கி அய்யா மருத்துவர் ராமதாசு. கடந்தசில
ஆண்டுகளாக சரிந்துவரும் தன் கட்சியின் செல்வாக்கை மீட்கவும் வேல்முருகன் பிரித்துசென்ற
சாதிகூட்டத்தை திரும்ம்ப மீடக்கவும் அப்பாவி தலித்மக்களின் மீது தாக்குதல் நடத்தி இழந்த
சாதி செல்வாக்கை நிமிர்த்தியிருக்கிறது ராமதாஸ் அண்ட் கம்பெனி. அறிவி ஜீவிகளும் ஆதிக்க
சக்திகளும் சொல்லுவதுபோல இது ஒன்றும் எதார்த்தமாகவோ, காதலுக்கவோ நடந்ததல்ல. ஒவ்வொரு முறையும் தலித்மக்களின் உயிரை
குறிவைக்கும் சாதி ஓநாய்கள் இந்தமுறை அவர்களின் வாள்வாதரங்களின் மிது திட்டமிட்டு தாக்குதல்
நடத்திருக்கிறது அவர்கள் நினைத்ததை நடத்திவிட்டார்கள். இந்த மூன்று கிராமங்களும் மீண்டு எழுவதற்கு
இன்னும் மூன்று தலைமுறை தண்டும்.தண்ணிகுடிக்க செம்பு இல்லை, படுக்க பாயில்லை, உறங்க
இடமில்லை, உடுத்த துணியில்லை எல்லாம் இழந்து நிர்வாணமாய் நிற்கிறது மூன்று கிராமங்களும்,
இந்த நிர்வாணத்தை அரசியல் செய்கிறது எதிர்கட்சிகள், ஆளும் கட்சியோ இது ஏதோ பிகார் பிரச்சனைபோல நடந்து கொள்கிறது. தமிழ்,தமிழரென்று தொண்டைகிழிய கத்தும் தமிழ் தேசிய
வாதிகளெல்லாம் அடுத்தடுத்த சூட்டிங்கில் பிசி. எப்போதெல்லாம் தமிழ் தேசியத்திற்கு இன்னல்
வந்ததோ அப்போதெல்லாம் ஓடிபோய் தீக்குளித்த தலித்துகளின் விட்டிற்கு இப்போது தீவைக்கபட்டிருக்கிறது
ஆனால் ஒப்பாரிவைக்க தமிழ் தேசிய தலைவர்களை மட்டும் காணவேயில்லை. எங்கோ மாநிலம் கடந்து
ரோட்டோரம் தூங்கி ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டிய தலைவனுக்கு இங்கிருக்கும் தர்மபுரிக்கு
போக நேரமில்லை. இதற்க்கெல்லாம் ஒரே ஒரு கரணம் தான் பாதிக்கபட்டவன் தலித். இந்த நவீனநூற்றாண்டிலும்கூட தலித் மக்கள்
பாதுகாப்பாக வாழ ஒருநாடும், அரசும் இல்லையென்பதே மிகபெரிய கேவலம்
இந்த
சமுகத்திற்குமுன் நாம் வைக்கும் கேள்விகள்:-
இத்தனை
பெரிய கொடுமைகளை செய்தபின்னும் இன்னும் சாதி வெறியை தூண்டும் விதமாக பேசிவரும் ராமதாசையும், குருவையும் கைது செய்யாததுயேன்?
குருபூஜையின்
பொது பதிக்க பட்டமக்களுக்கு 5 லட்சம் நிதிஉதவி.
தான் வாழ்க்கையே இழந்து நிற்கும் அப்பாவிகளுக்கு அம்பதயிரமா? இது என்ன நியாயம்?
திட்டமிட்ட
இந்த தீவரவாத செயலை முன்குட்டியே கண்டுபிடிக்கத அல்லது கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரிகளை
இதுவரை பணிநிக்கம் செய்யாதுயேன்?
இவளவு
பெரிய வன்முறை கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் நடந்து பொது எங்கே போனது காவல்துறை?
நேர்மாறாக
இந்த வன்முறையை தலித் மக்கள் செய்திருந்தால் பாசிச ஜெவின் போலீஸ் துப்பாக்கிகள் வெறிபிடித்த
யானைபோல தும்சம் செய்திருக்குமே, எங்கே கிடக்கிறது உங்களின் துரு பிடித்த துப்பாக்கி?
ஆதிக்க
சக்திகளுக்கு எதிராக சேரிகள் ஒன்றுபடதவரை. சாதி விடுதலையென்பது சாத்தியமேயில்லை என்பதற்கு
தர்மபுறியே சாட்சி
கண்ணுக்கு
கண். உயிருக்கு உயிர். “உயிர்துறந்தேனும் உரிமை காப்போம்”
No comments:
Post a Comment
thanks