தொடர்ச்சியாக இசுலாமியர்களையம், இசுலாத்தையும் தவறாக காட்டும் தமிழ் சினிமா கூட்டத்தில் இப்போது ப்ளூ சட்டை மாறனும் இணைந்து இருக்கிறார், ANTI INDIAN படத்தில் பாதுஷா (ப்ளூ சட்டைமாறன்) இறந்து போகிறார் புதைப்பதற்காக பள்ளிவாசல் எடுத்து செல்லும் பொது அவர் சுன்னத் (கத்னா) செய்யப்படவில்லை என்பதற்காக பள்ளி கல்லறையில் இடம் மறுக்கப்படுவதில் தொடங்கி பதிமூணுபேர் மரணத்திற்கு காரணம் , பொய் பேசும் இசுலாமிய மத தலைவர்கள் என இசுலாமியத்தின் மீதான வஞ்சகம் படம் முடியும் வரை தொடர்கிறது.
பொது சமூகத்துக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
உள்ளத்தில் இறைவனை ஏற்று, நாவால் கலிமா சொல்லி அதை நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பவன் மட்டுமே இசுலாமியர் ஆகிறார்.
கத்னா ( தோல் நீக்குதல்) என்னும் சுன்னத் ( சுன்னத் என்றால் கட்டாயமல்ல என்று பொருள் ) அடைப்படையில் ஒருவன் இசுலாமியனாக வாழ்வதற்கு கத்னா(சுன்னத்) என்பது கட்டயமல்ல.
மிக சமீபத்தில் இசுலாத்திற்கு வந்த ஒரு நபர் மதுரையில் இறந்து போனார் இறக்கும்போது அவர் சுன்னத் செய்திருக்கவில்லை மதுரை அவனியாபுரம் பள்ளி கல்லறை தோட்டத்தில் அவருடைய பூர்விக மத சொந்தங்களும் நாங்களும் சேர்ந்து அடக்கம் செய்தபோது மணி இரவு 12.
ஒருவேளை திரு ப்ளூ சட்டை மாறன் இதை சமூகத்தில் இருந்துதான் படமாக எடுத்தேன் என்றால் நீங்கள் பார்த்த அந்த இசுலாமியர்கள் இசுலாமின் அடிப்படை தெரியாதவர்கள் , சிலர் செய்யும் தவறுகளை மட்டுமே இசுலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பொது சமூகத்தில் ஒருவராக உங்களை பார்க்கமுடியாது, காரணம் தன்னை அறிவாளியாக நினைத்து மற்றவர்களின் படைப்பை தொடர்ந்து விமர்ச்சிப்பவர் நீங்கள். அதனாலேயே நீண்டகால இசுலாமிய வெறுப்பில் இருக்கும் ஒருவராகவே உங்களை பார்க்கிறேன்
நீங்கள் எடுத்திருப்பது படம் அல்ல . ஒரு துளி விஷம் !
ஆமையடி அப்துல்லா
No comments:
Post a Comment
thanks