தென்தமிழகத்தில் பசுபதி பாண்டியன், ஜான் பாண்டியன் போன்றவர்கள் அருவா தூக்கிய பிறகுதான் தலித்துகளின் நிம்மதியாக வாழமுடிந்தது
சுதந்திர இந்தியாவில் சட்டம், அரசு, காவல்துறை செய்யமுடியாததை அண்ணன் பசுபதி பாண்டியன் செய்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்றைக்கு அண்ணனை ரவுடி என்றும் சமூகவிரோதி என்று சொல்லும் இந்த சமுகம் அவரால்தான் திருநெல்வேலி , தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் தலித்துகள் பயமில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா?
மீண்டும் ஒரு படுகொலை. வழக்கம்போல் போல் இறந்தவன் யோக்கியன் அல்ல என்று வேகவேகமாக கதைகள் பேசுகிறது இந்த சமுகம் . பசுபதி பாண்டியனை சமூகவிரோதி என்று சொல்லுமளவிற்கு இந்த சமூகம் யோக்கியமானது இல்லை என்பதே உண்மை..
பசுபதி பாண்டியனின் செயல்கள் எல்லாம் ஆதிக்க சக்திக்களுக்கு எதிராகவும், அடக்கு முறைகளுக்கு எதிராகவும்தான் இருந்ததே ஒழிய இந்த சமுகத்திற்கு எதிராக இல்லை என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்
அண்ணா வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்...
No comments:
Post a Comment
thanks