Tuesday, November 30, 2021

உறங்கிவிடு என் மகளே

 

தினம் தினம் புது கீறல்

தினம் தினம் புது வாசனை

ஓமட்டிக்கொண்டே

பால்குடிக்க - மறுக்கும் 

பிள்ளைய

எந்த கதைய சொல்லி

தூங்கவைக்க.

 

பட்டு.

செல்லம்.

ராசாத்தி

போட்டும் பூவும் வைத்து

பத்து வட்டிக்காரனோடு

பாக்கி’ க்கு அனுப்பிய 

கதைய பாட்டிகிட்ட கேளு !

 

உதிரம் வெடித்து

சிதறிய நாளிலும்…

அறைக்குள் தள்ளி

வெளிதாப்பாள் போட்ட

கதைய உங்கப்பங்கிட்ட கேளு !!

 

போலீஸுதானே

போயிட்டுவான்னு

வேணுக்குள்ள தள்ளிய

கதைய உங்அத்தைகிட்ட கேளு !!!


வேசக்கி என்னடி

ஊருக்குள்ள வேல.

உன்னையும் என்னையும்

ஊர் தூக்கியெறிஞ்ச கதைய

ஆலமரத்து பிள்ளையார்கிட்ட கேளு

 

வலி !

வலி !!

வலி !!!

மலடாய்  இருந்துவிடு

என் மகளே

உதிரப்போக்கின்

வலியாவது மிச்சமாகும்

 

உறங்கிவிடு என் மகளே  

அம்புலிமா(ம)ன் வருவதற்குள்

உறங்கிவிடு மகளே…

 

நாளை

ஒரு கதையோடு

வருகிறேன்

நான்

பெற்ற மகளே

உறங்கி விடு.   


மலடாய்  இருந்துவிடு

என் மகளே

உதிரப்போக்கின்

வலியாவது மிச்சமாகும்

 

ABD'ulla

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!