மாவீரர் நாள்
இப்போதெல்லாம்
மாவீரர்களுக்கு
மெழுகுவர்த்தி
ஏற்றும்போது கைகள்
நடுங்கிறது
என்
உறவுகளை கொன்ற
ஆயுதம்
என் வரிப்பணத்திலிருந்து
வாங்கியது என்றெண்ணும்போது
என்
அம்மாவை
அக்காவை
தங்கையை
வன்கொடுமை செய்தது
எண்ணிலொருவன்
என்றெண்ணும்போது
முள்வேலி முகாமிற்குள்
முடங்கிப்போன இனத்தை
வேடிக்கை
பார்க்கும்போது
தமிழ்தேசியமும்
திராவிடமும்
கள்ளத்தொடர்பு
வைத்து
மலட்டு பிள்ளைகளை
பிரசவிக்கும்போது
நான்!
கூட நின்றவன்
ஆமைக்கறி கதை
சொல்லும்போது
இப்படி .
இப்படி ..
இப்படி …
கைநிறைய
துரோக குருதியை
வைத்துக்கொண்டு
இப்போதெல்லாம்
மாவீரர்களுக்கு
மெழுகுவர்த்தி
ஏற்றும்போது
என் கைகள்
நடுங்கிறது …
ஆமையடி அ அப்துல்லா
No comments:
Post a Comment
thanks